மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
மதுரை திருநகர் பஞ்சாலை தொழிலாளியின் மகன். பசுமலை மன்னர் கல்லூரியில் (பி.எஸ்சி.,) படிப்பு. இலக்கிய ஆர்வலர். "நல்ல சினிமாக்கள், நாம் வாழும் தெருக்களில் உள்ளன. நம் மண்ணின் மகத்துவத்தை பதிவு செய்தாலே, நம்பகமான சினிமாக்களை தந்துவிடலாம். உள்ளூரில் நேர்த்தியாக எடுக்கப்படும் சினிமாக்கள், உலக சினிமாக்களுக்கு ஒப்பானது என்பவர். கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று (தேசிய விருது), நீர்ப்பறவை படைத்தவர், இயக்குனர் சீனு ராமசாமி.
மதுரையில் அவர் மனம் திறந்ததிலிருந்து...,
* சினிமா ஆர்வம் வந்தது எப்படி?
மதுரையில் 400 சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஒரு முகவரி சொல்ல தியேட்டருக்கு முன், பின் என அமைவிடத்தை தெரிவித்த காலம். எனது பாட்டி சினிமா பிரியை. இன்றும் ஊன்றுகோலுடன் சினிமா பார்க்கச் செல்கிறார். சிறுவயதில் என்னையும், அழைத்துச் செல்வார். பருவத்தில் வரும் நோய், என்னையும் பிடித்தது. ஆட்டுக்கு இலை, தழையை காட்டி அழைத்துச் செல்வதை போல் மயக்கத்துடன், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளனாக சேர்ந்தேன். மாற்று சினிமாவை தந்தவர் அவர்.
* "தென்மேற்கு பருவக்காற்று அனுபவம் பற்றி...?
கதாநாயகர்களை மையமாக வைத்து, உருவாக்கும் கதைகளுக்கு, ஹீரோ தரும் தேதிகளில் தான், படமெடுக்க முடியும். ஒரு தாயை கதாநாயகனாக வைத்து "தென்மேற்கு பருவக்காற்று எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் ராணுவ அதிகாரி சிம்பு ஐசக்கிடம் தெரிவித்தேன். குறைந்த பட்ஜெட்டில், 34 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. சிறந்த நடிகை சரண்யா, பாடலாசிரியர், சிறந்த மாநில மொழி படம் என 3 விருதுகள் கிடைத்தன.
* இலங்கை கடற்படை, நம் மீனவர்களை சுட்டுக்கொல்கிறது. "நீர்ப்பறவையில் கதாநாயகி, "நான் தான் எனது கணவரை மீன்பிடிக்கப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினேன். நான் சொன்னதால்தான் அவர் போனார். அவர் சாவுக்கு நான் தான் காரணம். நான் தான் அவரைக் கொன்றேன், என பேசும் வசனம் தர்க்கப்பூர்வமற்று, முரண்பாடாக உள்ளதே?
கடைக்குச் சென்ற மகன் விபத்தில் பலியானால், தாய், "நான் சொன்னதால் தானே நீ கடைக்குச் சென்றாய். உன் சாவுக்கு நான் காரணமாகி விட்டேனே, என பாமரத்தனமாக அழுவார். அதுபோல்தான். இது அறிவு ஜீவிகளுக்கான படம் அல்ல. ஏழை மீனவர்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இந்திய தணிக்கைக்குழு அனுமதித்த எல்லைக் கோட்டிற்குள் நின்று, ஜனநாயக ரீதியில் குரல் எழுப்பியுள்ளேன். எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரம், எங்களுக்கு இல்லை. அதிலிருந்து தப்பித்து, மக்களுக்கான நீதியை சொல்லியிருக்கிறேன். கடற்கரை மீனவர்களின் நியாயம், தர்மத்தை பேசியிருக்கிறேன்.
* மண் சார்ந்த கதைக்களத்தை தொடர்ந்து கையாள்கிறீர்களே?
முன்பு கதைக்களம் தேனியில் இருக்கும்; படப்பிடிப்போ பெங்களூருவில் நடக்கும். தற்போது அவ்வாறு செய்ய முடியாது. இன்று உலக சினிமா, ஈரானிய சினிமாவின் பாதிப்பு அதிகம். களம் தான் கதை. "பேக்ட்ராப் இல்லாமல், பின்புலத்தை சொல்ல வேண்டும். நான், கதைக்களத்தில் 6 மாதங்கள் தங்குவேன். அனுபவங்களை உள்வாங்கி, கதை எழுதுகிறேன்.
* நீங்களும் சிலர் போல், மண்சார்ந்த கதைகளிலிருந்து விலகி, சமரசம் செய்து கொள்வீர்களா?
நேர்மையின்மை எப்போது வருகிறதோ, அப்போது சொந்த வாழ்வில் அச்சம் ஏற்படும். மக்கள் விரும்புவதை சொல்வதைவிட, எது தேவையோ அதை விரும்பும் வகையில் சொல்ல விரும்புகிறேன். மக்களை நம்புகிறேன், கைவிடமாட்டார்கள் என. அச்சமின்றி உள்ளேன். சமரசம் செய்து பிழைக்கும் நிலை ஏற்பட்டால், சினிமாவைவிட்டு வெளியேறிவிடுவேன்.
* கதைத் திருட்டு தொடர்கிறது. இயக்குனர் பாக்கியராஜ் வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி...?
வெளிநாட்டு "டிவிடிகளை பார்த்து, அப்படியே தமிழில் மேதமை கலந்து, விவரித்து சொல்ல கதைகளை திருடுகின்றனர். இவர்கள் எடுத்ததை திருட்டு "சிடியில் பார்ப்பதும் பெரும் குற்றம்தான். சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன், சார்லிசாப்ளின் படங்களின் கதைகளை திருட முன்வருவதில்லை. அதற்கு பெரும் அறிவு, கலாசார புரிதல் தேவை. நான், தமிழக எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்யவும், அவர்களிடம் முறையாக உரிமம் பெற்று படம் எடுக்கவும் விரும்புகிறேன்.
* அடுத்த படம்?
வெகுஜன ரசனையுள்ள மண் சார்ந்த கதைதான். விஜய் சேதுபதி, விமலுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன்.