Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் "செட்டில் ஆகி விட தோன்றுகிறது! கவிஞர் பா.விஜய்

04 பிப், 2013 - 14:46 IST
எழுத்தின் அளவு:

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே... வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... என்ற தன்னம்பிக்கை வரிகள் மூலம் நம் நெஞ்சுக்கு உரமூட்டியவர் பாடலாசிரியர் பா.விஜய். அந்த வரிகளுக்கு 2005ல் "தேசிய விருது கிடைத்ததோடு, பாடத் திட்டத்தில் சேர்த்து மகுடம் சூட்டியது, மதுரை காமராஜ் பல்கலை. எண்ண ஓட்டங்களுக்கு எழுத்து வடிவம் தந்த விஜய்க்கு, கவிஞர், நடிகர் என, பன்முகம். சொந்த ஊர் கும்பகோணம்; பிறந்தது கோவை; வசிப்பது சென்னை. மதுரையில் அவரோடு சில நிமிடங்கள்...

* "பன்முகம் சாத்தியமானது எப்படி?

1996 முதல் எழுத்து என்னுடன் பயணிக்கிறது. சரியான, திறமையான வியூகம் அமைத்தால், "பன்முகம் சாத்தியம்.

* அனைத்திற்கும் நேரம் போதுமானதாக உள்ளதா?

நேரம் ஒதுக்குவதில் பிரச்னை இல்லை. "புலிகளின் புதல்வன் எனும் தொடர் எழுதி வருகிறேன்; 2ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரையிலான சோழர்களின் வரலாறு அது. இதற்கு மட்டும் வாரத்தில் 3 நாட்கள் நேரம் ஒதுக்குகிறேன்.

* "இளைஞன் படத்திற்கு பின் வாய்ப்பு வரவில்லையோ?

120 கதைகளை கேட்டு, அதில் இரண்டை தேர்வு செய்துள்ளேன்; திரை வசனம் முடிந்துவிட்டது. காதல் கலந்த அந்த "திரில் படத்தில், எனக்கு இரண்டு நாயகிகள். யதார்த்தத்தை சித்தரிக்கும் அக்கதைக்கு, ஓராண்டாக நீச்சல், யோகா என என்னை தயார் படுத்தினேன். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவக்கம்.

* வாய்ப்புகள் பாதிக்க, தி.மு.க., ஆதரவு காரணமா?

எனக்கும், கருணாநிதிக்கும் இருப்பது இலக்கியம் தொடர்பான நட்பு மட்டுமே. "வித்தகக்கவிஞர் என கருணாநிதி பட்டம் சூட்டினார்; அதை சிலர் விமர்சித்தனர். "நீ என்ன சாதித்தாய்? எனக் கடிதம் எழுதினர்; நான் பொருட்படுத்தவில்லை.

* உங்களை கவர்ந்த பாடலாசிரியர்?

கண்ணதாசனின் இலக்கியம், வாலியின் காதல் வரிகளில் மூழ்கியவன் நான்; அவர்கள் தான் என் ஆசான்கள்.

* உங்களை வாரிசாக அறிவித்த வாலி பற்றி...?

85 வயதிலும் இளைமை வரிகளை உதிர்த்து வரும் கவிஞர் வாலி, என்னை கலையுலகின் வாரிசாக அறிவித்தது, நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்.

* விஸ்வரூபம் தடைபடுகிறதே?

கலையுலகின் பொக்கிஷம் கமல்; அவரின் அனுபவத்தை சந்தேகப்படுவதை விட, உற்சாகப்படுத்த வேண்டும்.

* நடிகனின் அடுத்த பரிணாமம் அரசியலாமே?

நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும். கிளின்டன் பார்க்க விரும்பிய, சென்னை தன்னார்வலர் "பாலம் கல்யாண சுந்தரம் போன்றோரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் "செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.

* "ரோல்மாடல் ஆக யாரை பின்பற்றுகிறீர்கள்?

"உழைப்பு, விடாமுயற்சி,க்கு, என் தந்தை பாலகிருஷ்ணன் தான்  "ரோல் மாடல்.

* "இளைஞன், காதல், எதிர்பார்ப்பு- அழகாய் சொல்லுங்களேன்!

குடியரசு நாடு என்பது, "குடிநாடாய் மாறும் அளவிற்கு, "டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள். 

ஜாதி திணிக்கப்படாத காதல் ஆரோக்கியமானது.

துப்பாக்கி படத்திற்கு எழுதிய "விடை கொடு மனமே பாடல், ராணுவ குடும்பத்திற்கும் கவுரவம் தரும் வகையில் அமைந்தது; அதற்கான அங்கீகாரம் மத்திய அரசிடம் கிடைக்கும் என நம்புகிறேன், என்றார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ராஜ் - trichy,இந்தியா
04 பிப், 2013 - 17:50 Report Abuse
 ராஜ் நீ சென்றுவிட்டால் நாடு எதையும் இளந்துவிடாது. நீ நாட்டுக்கு செய்தது என்ன. இந்த நாடுதான் உனக்கு நிறைய செய்துள்ளது. ஒருவேளை உணவிட்டவர்க்கே நன்றிகாட்டும் மனிதர்கள் நாம். தயவு செய்து இனிமேல் நாட்டைவிட்டு செல்வேன் என்பவர்கள் யாராக இருந்தாலும் சென்றுவிடுங்கள். நீங்கள் இல்லாவிடில் அந்த இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதுமே காத்திருப்பார். புதிய சிந்தனைகளும் பிறக்கும்
Rate this:
LAX - Trichy,இந்தியா
14 பிப், 2013 - 13:38Report Abuse
LAXஅப்படிப்போடு. அட்ராசக்கை ன்னானாம்.....
Rate this:
குமரேசன் .மு - Hochimin city ,வியட்னாம்
04 பிப், 2013 - 17:19 Report Abuse
 குமரேசன் .மு இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் "செட்டில் ஆகி விடலாம் போலிருக்கிறது.இவர் ஒரு முதுகெலும்பு இல்லா கவிஞன் ,வெளி நாட்டிலும் அரசியல் உள்ளதை புரியாமல் பிதட்டுகிறார் ,இவர் எவ்வாறு தன்னம்பிக்கை மிக்க வரிகளை இயற்றினார் என்று கேட்க தோன்றுகிறது ????
Rate this:
vinnanban - vathagundu,இந்தியா
04 பிப், 2013 - 16:00 Report Abuse
 vinnanban எல்லாம் ஹாலிவுட் பாடல்கள் மற்றும் வசனங்கள் காப்பி.
Rate this:
saravanan - london,யுனைடெட் கிங்டம்
04 பிப், 2013 - 15:16 Report Abuse
 saravanan இன்றைய அரசியலை பார்த்தால், வெளிநாட்டில் "செட்டில் ஆகி விட தோன்றுகிறது! ,யுவர் அப்சொளுட்லிட்டி CURRECT
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in