மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாதான் இவர் உயிர் மூச்சு; யதார்த்தம்தான் இவரின் அடையாளம். வசனங்களால் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் திரைப்படங்களை, காட்சிகளால் நிறைத்து நம்மை கண்குளிரச் செய்தவர். அதிகம் பேசாத ஓவியங்களாய் வந்து போவார்கள், இவரது கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் தரும் உன்னத கலைஞன். ஒவ்வொரு காட்சியிலும் ஒளியின் அற்புதங்கள் நிழலாடும். நிழல் கூட, நிஜமாகி கதை பேசும். குடும்ப உறவுகளின் உரசல்களுக்கு... குடும்ப குழப்பங்களுக்கு தனது பாணியில் திரைப்படங்கள் மூலம் தீர்ப்பு எழுதியவர்...இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா.
காலங்கள் கடந்தாலும், கலைநய படைப்புகளால், தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கண்ணாடிக்காரரின் கண் சிமிட்டல் கூட, காமிரா கவிதை ஆகும். இவர் இயக்கிய "வீடு திரைப்படத்திற்கு, அண்மையில் 25ம் ஆண்டு விழா கொண்டாடி ரசித்தது, ரசிகர் பட்டாளம். இவரது பட்டறையில், பதம் தீட்டிய பல இயக்குனர்கள், தேசிய விருதுகளை குவித்துக் கொண்டிருக்கின்றனர். மதுரை வந்த அவர் அசை போட்டவை இதோ:
* இப்போது எல்லாம் திரைப்படம் வெளிவரும் முன், எதிர்ப்பு வருகிறதே...?
எனக்கு அந்த மாதிரி அனுபவம் இல்லை. "ரெட்டைவால் குருவி வெளிவந்த போது, மாதர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடந்ததை, நடப்பதை தான், அதில் கூறியிருந்தேன். நல்ல படைப்புகள், எதிர்ப்புகளை மீறி வெற்றி பெறும்.
* சினிமாவிற்கு "கிளாமர் அவசியமா?
எது கிளாமர்? எனக்கு அதில் உடன்பாடில்லை; கோடம்பாக்கம் சினிமாவிற்கு அது தேவைப்படுகிறது. "மூன்றாம் பிறை படத்தில், "பொன்மேனி உருகுதே பாடலை தவிர்த்திருக்கலாம்; தயாரிப்பாளருக்காக, என்னை நானே சமரசம் செய்து, இணைத்த பாடல் அது.
* காமெடிக்கு தனி நடிகர்களை நீங்கள் பயன்படுத்தவில்லையே...?
ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி படத்தில் @தவையான காமெடி இருக்கும்; அவை, நம்மைச் சுற்றிய நிகழ்வுகள். அதற்கு நடிகர்களே போதும், தனி காமெடி நடிகர் தேவையில்லை.
* காலையிலும், மாலையிலும் மட்டும் படம் பிடிப்பீர்களாமே?
அப்படி யார் சொன்னது? காலையும், மாலையும், கேமராவிற்கு ஏற்ற இயற்கை ஒளி இருக்கும். பகலில் நல்ல நிழலில் படம் எடுத்திருக்கேன். எந்த ஒளியும் வீணாகாது.
* நல்ல படைப்பின் இலக்கணம் என்ன?
பார்ப்பவரையும், கேட்பவரையும் நெகிழ வைக்க வேண்டும். தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இரு நாட்களாவது உறக்கத்தை கெடுக்க வேண்டும், அது தான், நல்ல படைப்பு.
* டைரக்டர்-தயாரிப்பாளர் இவர்களில் நல்ல படைப்பாளி யார்?
தயாரிப்பாளரிடம் லாபம் நோக்கமாக இருக்கும். நல்ல படைப்பைத் தருபவர், டைரக்டர் தான்.
* படத்தின் இசையை யார் தீர்மானிக்க வேண்டும்?
எனது பிரதான இசையமைப்பாளர் இளையராஜா. "எந்தக் காட்சிக்கு இசை தேவை, எதற்கு தேவையில்லை, என்பதை, என் முடிவுக்கு விட்டுவிடுவார். என் படைப்பிற்கு, நான்தான் வழிகாட்ட வேண்டும்.
* "டைரக்ஷன்-ஒளிப்பதிவு - மூன்றாம் பிறை தந்த உங்கள் முதல் பார்வை எது?
ஒளிப்பதிவுதான். சிரமப்பட்டு சில காட்சிகளை எடுத்திருப்பேன்; ரசிகர்களிடம் ஆதரவு இருக்காது. சாதாரண சூரிய உதயத்தை ஒளிப்பதிவு செய்ததை, கைதட்டி ரசித்தனர். அந்த கைத்தட்டல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
* உங்கள் நெஞ்சைத்தொட்ட சமீபத்திய படம்?
சீனு ராமசாமியின் "நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்க்கையை, அழகாய் காட்டியிருந்தார். என்னிடம் பயின்றவர் என்பதால், இரட்டிப்பு பெருமையடைந்தேன்.
* மனம் கவர்ந்த இளைய இயக்குனர்கள்?
பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், சற்குணம், வசந்த பாலன், சிம்பு தேவன் சிறந்த படம் தருகின்றனர்.
* "வெற்றிப் படம் ரகசியம் சொல்லுங்களேன்?
மக்களை சார்ந்த கதைகள், அவர்களிடம் எளிதாய் போய்ச் சேரும். யார் தலையீடும் இல்லாமல், சமரசங்களுக்கு இடமளிக்காமல், டைரக்டருக்கு சுதந்திரம் கிடைத்தால், அந்த சினிமா, நிச்சயம் வெற்றி பெறும்.
* சினிமாக்களில் வன்முறை, எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடாதா?
பிறர் படம் பற்றி நான் கருத்து சொல்வதும், கேட்பதும் அநாகரீகம். என் படங்களில் அது போன்ற தோற்றம் இருந்தால், கேளுங்கள், சொல்கிறேன்!