என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
நடிகை பூஜாகாந்தி மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப் போவதாக டாக்டர் கிரண் கூறியுள்ளார். நடிகை பூஜாகாந்திக்கும், தொழில் அதிபர் ஆனந்த் கவுடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களது நிச்சயதார்த்தத்துடன் திருமணம் நின்று போனது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த 35 நாட்களில் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், நடிகை பூஜாகாந்தி மீது டாக்டர் கிரண் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை சுப்பிரமணியபுரா போலீசில் கொடுத்தார். நடிகை பூஜாகாந்தி தன்னை கொலை செய்து விடுவதாக எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்து உள்ளதாக அவர் புகாரில் கூறி இருக்கிறார்.
ஆனால், அந்த புகாரை நடிகை பூஜாகாந்தி மறுத்தார். சினிமா துறையில் தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டாக்டர் கிரண் பொய் புகார் செய்திருப்பதாக போலீசில் புகார் செய்தார். டாக்டர் கிரண், நடிகை பூஜாகாந்தி இருவர் கொடுத்த புகாரின் பேரிலும், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் நடிகை பூஜாகாந்திக்கு எதிராக நடிகர் சங்கத்திலும், மூத்த நடிகர் அம்பரீசிடமும் டாக்டர் கிரண் புகார் செய்ய முடிவு செய்துள்ளார். இதுபற்றி கிரண் அளித்துள்ள பேட்டியில், ‘நடிகை பூஜாகாந்திக்கு குழந்தை இருப்பது குறித்து ஆனந்த் கவுடாவுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். பூஜா காந்தி குறித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்யவிருக்கிறேன், என்றார்.