இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மாஜி நடிகை ராதாவின் மகள், கார்த்திகா, ஏற்கனவே, திரையுலகில் கால் பதித்து விட்டார். இவரைத் தொடர்ந்து, ராதாவின் இளைய மகள், துளசியும், மணிரத்னத்தின், கடல் படத்தின் மூலம், தமிழுக்கு அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் படப் பிடிப்பு முடிந்துள்ளதால், "யான் என்ற படத்திலும், துளசி, தற்போது நடித்து வருகிறார். தங்கையைப் பற்றி பேசும்போதெல்லாம், கார்த்திகாவின் முகத்தில், சந்தோஷக் களை தாண்டவமாடுகிறது. "கடல் படத்தின் ரிலீசை, துளசியை விட, நான் தான், அதிகம் எதிர்பார்த்துள்ளேன். துளசியின் முதல் படம், வெளியாவதை நினைத்தால், பட படப்பாக இருக்கிறது. ஒட்டு மொத்த குடும்பமும், துளசியை, திரையில் பார்க்க, ஆவலாக உள்ளோம் என்ற கார்த்திகா, "எங்க அம்மா, நடிகையாக இருந்தாலும், எங்களை சினிமா வெளிச்சம் படாமல் தான், வளர்த்தார். சினிமாவில் நடிக்க வரும்வரை, திரையுலகத்தை பற்றி, எனக்கும், துளசிக்கும், அதிகமாக எதுவும் தெரியாது என்கிறார், அப்பாவியாக.