தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கச்சி பாப்பா கேரக்டரில் தமிழில் அறிமுகமானவர் சரண்யா மோகன். தொடர்ந்து தங்கச்சி கேரக்டராக வாய்ப்பு வரவே கேரளா பக்கம் போய்விட்டார். "ஞான் இப்போள் வல்லிய பெண்ணாக்கும் ஹீரோயினாயிட்டுதன்னே ஆக்ட் செய்யும்" என்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு வெண்ணிலா கபடிக் குழுவில் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு விஜய் பட வாய்ப்பு என்பதால் மீண்டும் தங்கச்சி கேரக்டருக்கு இறங்கி வந்தார். பிறகு அழகர் சாமியின் குதிரையில் ஹீரோயின் ஆனார். இப்படி மாறி மாறி நடித்து வந்த சரண்யா இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று உறுதியான முடிவு எடுத்து விட்டார். அந்த முடிவுக்குப் பிறகு இப்போது அவர் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் படம் "காதலைத்தவிர வேறொன்றுமில்லை". பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்குகிறார். சாட்டை யுவன் ஹீரோ. மெரீனா, பசங்க பாணியிலான சின்ன புள்ளைங்க கதையாம். டியூசன் செண்டரில் படிக்கிற சின்னப் புள்ளைங்களின் காதல் படமாம். சரண்யா மோகன் டியூசன் டீச்சராம். யுவன் அவரிடம் பாடம் படிக்க வந்து காதல் பாடம் கேட்பவராம்.
திரும்பவும் சரண்யாவை தங்கச்சி கேரக்டருக்கு அனுப்பிடாதீங்கப்பு...!