துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிற 28ந் தேதி வருகிறது. அன்றைய தினம் தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிறது. அதாவது மக்கள் கூட்டத்தால் ஹவுஸ் புல் ஆகவில்லை. புதுப் படங்களால் ஹவுஸ் புல்லாகிறது. அன்றைக்கு பரங்கி மலை ஜோதி வரைக்கும் புதுப் படங்களால் நிறைந்து வழியப்போகிறது. ஆண்டுதோறும் அரசு திரைப்படங்களுக்கு வழங்கும் மானியத்தை பெறுவதற்காக இந்த ஆண்டு பட்டியியலில் இடம் பெறுவதற்காகவும், அரசு விருது (கொடுத்தால்) பெற இந்த ஆண்டுக்குள் இருப்பதற்காகவும் இந்த தள்ளுமுள்ளு. வெளியாகிற படங்களில் விஷால், த்ரிஷா நடித்த சமர் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்ற அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். பத்தாயிரம் கோடி, கோழிகூவுது, புதுமுகங்கள் தேவை, பயபுள்ள, அகிலன், லொள்ளு தாதா பராக் பராக், பாரசீக மன்னன், கண்டுபுடிச்சிட்டேன், உண்மை, மாமன் மச்சான், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு போன்ற படங்கள் வெளிவருகிறது. இன்னும் சில படங்கள் வெளிவரலாம். அல்லது வெளிவருவதாக அறிவித்துள்ள படங்கள் பின் வாங்கலாம்.
அதுசரி... வாரத்துக்கு 3 படங்கள்தான் ரிலீசாகணுங்ற தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சுங்கோ...!