இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி, நடிகையாக உயர்ந்திருப்பவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:
விஸ்வரூபம் - 2 படத்தை பற்றி...?
விஸ்வரூபம் - 2 படத்தின் கேரக்டர்கள், முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும். அஸ்மிதா பாத்திரத்தில் நடித்துள்ளேன். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் தான், அஸ்மிதா யார் என்பது ரசிகர்களுக்கு தெரியும். சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கிறது.
விஸ்வரூபம் படத்தில் நடித்த பின் எப்படி உணர்கிறீர்கள்?
இதற்கு முன், பொழுது போக்கிற்காக தான் நடித்தேன். விஸ்வரூபம் படத்தில் நடித்த பின் தான், சமூக பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பொறுப்பும் அவசியம். அவரவர் வேலையை மட்டும் செய்து விட்டு இருக்கக் கூடாது. புத்தகத்தில் உள்ள கல்வியை மட்டும் படிக்க கூடாது. நாட்டு நடப்பை அறிந்து கொள்ள வேண்டும்.
நடிப்பதற்காக நிபந்தனை போடுவீர்களா?
படங்களில் நடிப்பதற்கு, எந்த நிபந்தனையும் விதிப்பது இல்லை. கதை எனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும்; அவ்வளவு தான்.
நீங்கள் நடிக்கும் படங்கள் பற்றி...?
இந்தாண்டு, விஸ்வரூபம் - 2, வடசென்னை இரண்டு படங்கள் தான் வெளியாகின்றன. ஆறுமாதமாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது வடசென்னை, டப்பிங் செய்து கொண்டிருக்கிறேன்.
இரண்டு நாயகியர் படத்தில் அதிகம் நடிக்கிறீர்களே?
இரண்டு நாயகியர் படத்தில் நடிப்பதால், என் தரம் குறையும் என, நினைப்பதில்லை. எனக்கான ரோல் என்ன, இயக்குனர் யார் என்பதை மட்டுமே பார்ப்பேன்.
நடிப்பு, இசை என இரண்டு துறைகளில் பணியாற்றுவது குறித்து...?
என்னைப் பொறுத்தவரை, நடிப்பு, இசை இரண்டுமே ஒன்று தான். எதில் வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை பயன்படுத்துகிறேன்.
ஸ்ரீரெட்டி புகார் குறித்து?
அவர் சொல்வது நிஜம் என்றால், அதை சொல்வதற்கு நிறைய தைரியம் தேவை. எனக்கு, அந்த மாதிரி எந்த சம்பவமும் நடந்ததில்லை. அந்த மாதிரி யாருக்காவது நடந்தால், அதை கண்டிப்பாக வெளியில் சொல்வது சரி தான். சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
எதிர்கால திட்டம்?
இன்றைய மதிய உணவே எங்கு சாப்பிட போகிறேன் என தெரியவில்லை. இதில் எதிர்கால திட்டம் குறித்தெல்லாம் கேட்கிறீர்களே...