பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திரைத்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், கடின உழைப்பால், தனக்கென, ரசிகர்கள் மனதில் தனி ஒருவனாக இடம் பிடித்தவர், ஜெயம் ரவி. முதல் முறையாக, தன் மகனையும் திரைத்துறைக்கு அழைத்து வந்த ரவி டிக் டிக் டிக் பட அனுபவத்தையும், தன் குடும்பத்தை பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டதிலிருந்து:
தமிழில், விண்வெளி தொடர்பாக எடுக்கப்பட்ட முதல்படமான,டிக் டிக் டிக் பற்றி?
கதையை கேட்டு, சிலர் சிரித்தனர்; மற்றும் சிலர் கேலி செய்தனர். பைத்தியம் பிடித்து விட்டதா... என்று கூட, சிலர் கேட்டனர். எனக்கு உள்ள ஒரே நம்பிக்கை, ரசிகர்கள். இந்த படத்தை எடுத்தது, சாதாரணமான விஷயம் இல்லை. எங்களின் முதல் முயற்சியே வெற்றியாக அமைந்தது. இதற்காக படத்தின் மீது முதலில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு தான், நன்றி சொல்ல வேண்டும்.
இந்த இடத்திற்கு வர, எந்தளவு கஷ்டப்பட்டீர்கள்?
எங்கள் குடும்பத்தில் அனைவருமே கஷ்டப்படுவோம். எனக்கு சொல்லிக் கொடுத்த பாடமே, அப்படித்தான். கஷ்டப்படு; பலன் வராமல் இருக்காது. லேட்டா வந்தாலும், ஒரு நாள் கண்டிப்பாக பலன் வரும் என்பதே, எங்களின் தாரக மந்திரம்; அதை நாங்கள் உறுதியாக பின் தொடருகிறோம்.
ரசிகர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமீபத்திய, டிக் டிக் டிக் படம் உட்பட, என் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் காரணம், ரசிகர்கள் தான். யோசிப்பதற்கான தைரியத்தை தருவதே ரசிகர்கள் தான். இப்படத்தை ரசிகர்கள் ஏற்பரா... என, சந்தேகப்பட்டோம். தரமான எந்தப் படத்தையும் அவர்கள் ஏற்பர் என்பதை புரிந்து, ரசிகர்களை சந்தேகப்பட்டதற்காக தலையில் குட்டிக் கொண்டேன்.
சண்டைக்காட்சிகளில், ரிஸ்க் எடுக்க ஆரம்பித்து விட்டீர்களே?
பேராண்மை, பூலோகம், டிக் டிக் டிக் படங்களில் நடிக்கும்போது தான், ரொம்ப சிரமப்பட்டேன். என்னை அதிகமாக பாடுபடுத்தியவர் மைக்கேல் மாஸ்டர் தான். அநியாய உழைப்பாளி; அதற்கான பலன், இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த படங்களில் நடித்த போது, பல இடங்களில் அடிபட்டு, ரொம்பவே வலித்தது. ஆனாலும், ரசிகர்களின் கைதட்டல் சத்தத்தில், அந்த வலி மறைந்து விட்டது.
உங்கள் மகனை பற்றி?
கவிஞர் மதன் கார்க்கி, எனக்கும், என் மகன் ஆரவ்வுக்கும் எழுதிய, குறும்பா... பாடலை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது. எனக்கு தந்தது போலவே, நுாறு மடங்கு ஆதரவை, என் மகனுக்கும், அனைவரும் கொடுத்துள்ளனர். ஆரவ், கொஞ்ச நேரம் கூட, ஒரே இடத்தில் இருக்க மாட்டான்.இந்த படத்தில் நடிப்பதற்காக தான், ஒரே இடத்தில் அதிகம் இருந்தான். என் தந்தை, என்னை நடிகனாக்கி பார்த்த போது, அவருக்கு இருந்த உணர்வை, இப்போது நான் உணர்கிறேன். அப்பா - மகன் உறவு பற்றி, இப்போது தான், எனக்கு புரிகிறது.
அப்பா எடிட்டர் மோகன், அண்ணன் இயக்குனர் மோகன்ராஜாவைப் பற்றி?
என் தந்தை வேர் என்றால், நானும் அண்ணனும் கிளைகள். எனக்கு சைக்கிள், பைக் ஓட்டக் கற்றுக் கொடுத்தது எல்லாமே அண்ணன் தான். திரைத்துறை சார்ந்த பல விஷயங்களை அண்ணன் எனக்கு கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு விஷயத்தையும் எனக்கு புரிய வைத்தார். என் அறிவை வளர்த்தது, அண்ணன் தான். அவர் இல்லையென்றால் நான் இல்லை.