ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும், பாகுபலிக்குப்பிறகு பிரபாசுடன் நடிக்க இந்திய அளவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கரும் பிரபாசுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஐதராபாத்துக்கு வந்த இவர் மீடியாக்களை சந்தித்தார் அப்போது, பிரபாஸ் என்னை கவர்ந்த நடிகர். அதனால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறிய ஸ்வரா பாஸ்கர், நான் இந்தி படங்களில் நடித்து வந்தபோதும் எனது தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.