தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் உருவாகியுள்ள 'செக்ஸி துர்கா' படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டுமோ அதைவிட அதிகமாகவே சந்தித்துவிட்டது.
இந்தப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தும், இந்தியன் பனோராமா அங்கீகரித்தும், கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திடீர் தலையீட்டால் கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா((IFFI))வில் திரையிட இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சென்சார் போர்டு இந்தப்படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது செக்ஸி துர்கா என்கிற டைட்டிலை எஸ் துர்கா (S DURGA) என மாற்றும்படி குறிப்பிட்டதாம். இதை காரணம் காட்டி, தங்களிடம் இருந்து மறு சான்றிதழ் கிடைக்கும் வரை எந்த விழாக்களிலும் படத்தை திரையிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
தற்போது ஒருவழியாக ரிவைசிங் கமிட்டிக்கு சென்று ஒரு இடத்தில் கூட வெட்டு வாங்காமல் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது இந்தப்படம். அதேசமயம் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சில வார்த்தைகளை மியூட் செய்ய சொன்னதுடன், படத்தின் டைட்டில் 'எஸ் துர்கா' (S DURGA) என்றே இடம்பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறார் இயக்குனர் சனல்குமார் சசிதரன்.