Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

இனி தான் சம்பாதிக்கணும் : இயக்குனர் ராம்

08 பிப், 2018 - 11:35 IST
எழுத்தின் அளவு:
From-now-i-am-going-to-earn-income-says-Directorram

கமர்ஷியல் சினிமாக்களில் இருந்து மாறுபட்டு மாற்று சினிமாவை கொடுக்கும் இயக்குநர்கள் வெகுசிலரே அதில் முக்கியமானவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம், சினிமாவிற்கு வந்த 10 ஆண்டுகளில் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பலராலும் பாராட்டை பெற்றுள்ளது.

இயக்கம் தவிர தங்கமீன்கள் படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திய இயக்குநர் ராம், தற்போது சவரக்கத்தி படம் மூலம் நடிகராக களமிறங்குகிறார். அதுவும் தன்னைப்போன்று மாறுபட்ட சினிமாவை தரும் மிஷ்கின் உடன் இணைந்து நடித்துள்ளார். தனது சினிமா பயணம் பற்றியும், இப்படம் குறித்து நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பார்ப்போம்...

* உங்களது படங்களில் கதை அமையும் முறை?
கற்றது தமிழ் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை சொன்னது. தங்கமீன்கள் அப்பாவுக்கும் - மகளுக்குமான அன்பின் வெளிபாடு. அதில் கிராமத்து பள்ளிக்கூடம் ஒரு முக்கிய கதை சொன்னது. தரமணி, ஆண் - பெண் உறவு, அவர்களை சுற்றிய வாழ்க்கை முறையை பேசியது. பேரன்பு படம் நான் கேட்ட ஒரு உண்மை கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.

* உங்களை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர்கள்?
சின்ன வயதில் இருந்தே கதை பேசுவது பிடிக்கும், கதை எழுதுவது பிடிக்கும். ஒரு எழுத்தாளராகத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், இயக்குனராகிவிட்டேன். வெளிநாட்டு இயக்குநர்கள் நிறைய பேர் உள்ளார்கள். நம்நாட்டில், பாலுமகேந்திரா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், மம்முட்டி இப்படி நிறைய பேர் உள்ளார்கள். எனக்கும் வயதாகி கொண்டே போகிறது. அதனால் நிறைய உதவி இயக்குனர்களிடம் இருந்தும் நான் கற்று வருகிறேன்.

* உங்கள் குடும்பம் ?
அப்பா திருநெல்வேலி, அம்மா மதுரை, அப்பா அரசாங்கத்தில் வேலை பார்த்ததால் பல ஊர்கள் சுற்றி வந்து விட்டேன். திருப்பூர், கோயம்பத்தூர் என பல ஊர்களை சொல்லலாம்.

* கதைக்காக நடிகர் தேர்வு செய்வீர்களா இல்லை நடிகருக்காக கதை எழுதுவீர்களா?
இந்த இரண்டையும் நான் செய்வது இல்லை. ஒரு படம் முடிந்த பிறகு அடுத்து என்ன கதை, எப்படி படம் பண்ணலாம் என்று யோசித்து தான் மற்றவர்களை முடிவு செய்கிறேன்

* சமீபத்திய இயக்குநர்களில் உங்களுக்கு நம்பிக்கை தந்தவர்கள்?
2000-மாவது ஆண்டில், நான், ஏழில், வெற்றிமாறன், வெங்கட்பிரபு போன்றவர்கள் வந்தோம். அதன்பிறகு அமீர் உள்ளிட் பலர் வந்தார்கள். பின் கொஞ்சம் இடைவெளி அமைந்தது. இப்போது சில இயக்குனர்கள் தரமான கதை கொண்டு வருகிறார்கள். காக்கா முட்டை மணிகண்டன், ஒரு கிடாயின் கருணை மனு அதிதி செங்கப்பா, அருவி அருண் புருசோத்தமன், குரங்கு பொம்மை நித்திலன், அட்டக்கத்தி ரஞ்சித், விக்னேஷ் சிவன் போன்றவர்களை சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. அப்டி ஒரு முடிவை தைரியமா வைத்த இயக்குனரை பாராட்டனும். பல விமர்சனங்கள் வந்தாலும் அந்த இயக்குனர் ஒரு நல்ல இடத்திற்கு வருவார் என்று நம்புறேன்.

* சினிமாவில் கற்றுக்கொண்டது?
வாழ்க்கையில் நான் கற்று கொள்ள நிறைய வாய்ப்பு சினிமாவில் இருக்கிறது. போலிதனங்கள் இல்லாமல் என்னையே நான் கேள்வி கேட்டுக்கொள்ள வாய்ப்பு. ஒவ்வொரு படம் முடியும் போதும் நான் கற்று கொண்டு கொள்வதாக நினைக்கிறன்

* தரமணியில் ஆண்ட்ரியாவை மனதில் வைத்து தான் கதை எழுதினிங்களா?
கதை பண்ணலாம் என்று நினைக்கும் போது இந்த கேரக்டர் இப்படி தான் இருப்பாங்க, அவங்க வாழக்கை பிரச்சனையில் இதெல்லாம் இருக்கு என்று முன்னாடியே சொல்லிட்விட்டேன். அவங்க ஓகே சொன்னால் இந்த கதை பண்ணுவோம் இல்லனா விட்டுடலாம் என்று நினைத்து, 10 நிமிடம் ஆண்ட்ரியாவிடம் கதை சொன்னேன். அவரும் கதையை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என்று சொன்னார். அதன்பின் தான் நான் அடுத்தக்கட்டத்திற்கு போனேன். ஆண்ட்ரியா வேண்டாம் என்று சொல்லியிருந்தால் தரமணி பண்ணியிருக்கவே மாட்டேன்.

* பேரன்புவில் மம்முட்டி எப்டி வந்தார்?
ஒரு சுயநலமிக்க மனிதன், எப்படி ஒரு பேரன்பு மிக்க மனிதனாக மாறுகிறான், அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவன் வாழக்கை பயணம் என்ன என்பதை ஒரு புத்தகம் போல் சொல்லும் படம் தான் பேரன்பு.

* நீங்களும் நடிகராகிவிட்டீர்கள், நடிப்பதற்கும், இயக்குவதற்கும் என்ன வித்யாசம் ?
என்னை கேட்டால் நடிப்பது ரொம்ப சுலபம். தெரியவில்லை என்றால் நாம கேள்வி கேட்கலாம். இயக்குனர் என்றால் நம்மகிட்ட கேள்வி கேட்பார்கள். இதில் பொறுப்பு அதிகம்.

* தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வருதா?
இயக்கம் தான் எப்போதும் என் முதல் சாய்ஸ். அப்பா ரோல் நிறைய வருகிறது. வீட்டு, வாடகை உள்ளிட்ட மற்ற சில செலவுகள் இருப்பதால் அதை சமாளிக்க படங்களில் நடிக்க வேண்டி இருக்கிறது. பிடித்த கதைகளில் நடிக்கிறேன்.

* நான்கு படம் இயக்கிய பிறகு கொஞ்சம் வருமானம் பார்த்து இருப்பீங்களே ?
இல்லையே. முதல் படத்துக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்துருபாங்க என்று நினைக்கிறீங்க? நான்கு படத்திற்கு பிறகு கொஞ்சம் கஷ்டம் இல்லை. அவ்வளவு தான். சாப்பாடு, வாடகை, ஸ்கூல் பீஸ், ஆபிஸ் வாடகை, உதவியாளர்கள் சம்பளம் என்று ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. அதே நாளைக்கு ஒரு மெடிக்கல் செலவு என்றால் என்னால் முடியாது. இனி தான் அதற்காக சம்பாதிக்கணும் சேமிக்கணும்.

* மிஸ்கினுடன் சேர்ந்து நடித்த அனுபவம்?
வழக்கமாக நாங்க எப்படி பேசிக் கொள்வோமோ அதைப்போல்தான் படப்பிடிப்பு தளமும் இருக்கும். சுதந்திரமாக வேலை பார்க்கலாம். இந்தபடத்தில் நான் முடி திருத்துபவராக நடிக்கிறேன். மூன்று நாட்கள் எப்படி முடி வெட்டுவது என்று பயற்சி கொடுத்தார்கள். வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். எனக்கு ஜோடியாக பூர்ணா, மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். படம் நல்ல காமெடியாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in