'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில், ஒரு பெரிய போராட்டத்துக்கு பின், முக்கிய இடத்தை பிடித்துள்ளவர், ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடன் ஒரு சந்திப்பு:
சினிமாவில் இப்போது உங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் போராடினீர்கள்?
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக போராடித் தான், இந்த இடத்தை பிடித்திருக்கிறேன். ரசிகர்களின் மனதில், எனக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளதை நினைத்தால், சந்தோஷமாக உள்ளது. காக்கா முட்டை படத்துக்கு பின் தான், என் மீது எல்லாருக்கும் நம்பிக்கை வந்தது. அதற்கு முன், சிறிய கேரக்டர்களில் தான் நடித்தேன்.
காக்கா முட்டையில், அம்மா ரோலில் நடித்தது பற்றி...?
அந்த படத்தை பொறுத்தவரை, அம்மாவா, அக்காவா என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண்ணாக, உணர்வுப்பூர்வமாக நடித்ததை அனைவரும் பாராட்டினர்.
முறைப்படி நடனமாட கற்றுக் கொண்டீர்களா?
முறைப்படி யாரிடமும், நான் நடனம் கற்கவில்லை. ஒரு, டிவி சேனலின் நடன நிகழ்ச்சியில், பரிசு வென்றேன். அதில் கிடைத்த ஊக்கம் காரணமாகவே, சினிமாக்களிலும் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.
தமிழ், மலையாளம், ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் நடிக்கிறீர்களே?
இதை, கண்டிப்பாக நான் எதிர்பார்க்கவில்லை. மலையாளத்தில், சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜோமோன்டே சுவிசேஷங்கள் மற்றும் சகாவ் படத்தில் நடித்தது, எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. மலையாள படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. அதே போல், ஹிந்தியில், டாடி படத்திலும், எனக்கு நல்ல ரோல்.
கவர்ச்சியான வேடங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா?
எனக்கு என்ன வசதியாக இருக்கிறதோ, அதைத் தான் செய்வேன். என்னிடமிருந்து, ரசிகர்கள் என்ன எதிர் பார்க்கின்றனரோ, அதை மட்டுமே செய்வேன்.
மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி...?
பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க அழைப்பு வரும்போது, கொஞ்சம் பயமாகத் தான் இருக்கு. இதுபோன்ற படங்களில் நடிக்கும்போது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் நடிக்க வேண்டும்.
முதல் முறையாக தனுஷ் ஜோடியாக நடிப்பது பற்றி?
வட சென்னையில், தனுஷ் ஜோடியாக நடிக்கிறேன். அந்த பகுதியில் வசிப்பவர்களை பிரதி எடுத்தது போல், ஒரு ரோல். முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளேன். வசனங்களை பேசும்போது, தனுஷ் உதவி செய்தார். இதில், ஆண்டரியாவும் இருக்காங்க.
எந்த பின்னணியும் இல்லாமல், சினிமாவில் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் என்ன?
என் மீது நான் வைத்த நம்பிக்கை தான் காரணம். என்னால் ஹீரோயினாக முடியாது என கூறியவர்களும் இங்கே இருக்கின்றனர். எல்லா விஷயங்களையும் சவாலாக எடுத்துக் கொண்டு, ஜெயித்தேன்.
சமீபகாலமாக, நடிகையர், அழகுக்காக அறுவை சிகிச்சை செய்வது குறித்து...?
அப்படி செய்வது, அவரவர் விருப்பம். அதில் தப்பு இல்லை என, தான் நினைக்கிறேன். அழகை கூட்டுவதற்கு, ஏதாவது செய்யலாமா என, நான் கூட யோசித்தது உண்டு; ஆனால், ஊசி, அறுவை சிகிச்சை என்றால், எனக்கு பயம். முகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; நாம் நன்றாக நடித்தால், ரசிகர்கள் ஏற்றுக் கொள்வர் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
ஹீரோக்களின் ஆதரவு இருந்தால் தான், ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஹீரோயின்களுக்கு, ஹீரோக்களின் ஆதரவு தேவையில்லை; திறமை இருந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.
இன்னும் ஏன் வாடகை வீட்டில் இருக்கீங்க?
இப்போது நான் இருக்கும் கோடம்பாக்கம் வாடகை வீடு ராசியாக உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து இங்கு இருக்க முடியாது. வேறு வீடு பார்த்து கொண்டு இருக்கிறேன். புதிதாக வீடு கட்டும் அளவுக்கு இன்னும் சம்பாதிக்கவில்லை.
உங்களை கவர்ந்த நடிகை?
ஒவ்வொரு நடிகையிடமும் சில விஷயங்கள் பிடிக்கும். சமந்தாவை ரொம்ப பிடிக்கும். சமீபத்திய நடிகைகளில் கருப்பனில் தன்யா, மேயாத மானில் இந்துஜா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. வரலட்சுமியும் நன்றாக நடிக்கிறார்கள்.
கைவசம் உள்ள படங்கள்?
மணிரத்னம் படம், கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம், பிரபுதேவாவுடன் ஒரு படம், ஏ.எல்.விஜய் உடன் ஒரு படம் என்று பிஸியாக இருக்கிறேன்.