பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முன்னணி நடிகையர் எவரும், நடிக்க தயங்கும் வேடத்தில் நடித்து, தரமணி படத்தில், ரசிகர்களின் பாராட்டுகளை வாங்கி குவித்து வருகிறார், ஆண்ட்ரியா. சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள ஆண்ட்ரியாவுடன், ஒரு அரட்டை.
தரமணி படத்தின் கதை, உங்களை மனதில் வைத்து, எழுதப்பட்டது போல் இருக்கிறதே?
ஹீரோயினுக்கு இந்த மாதிரி ரோல் கிடைப்பது அபூர்வம். இயக்குனர் ராம், ஒரு கதையை எழுதி, அதை அழகாக காட்சிப்படுத்தி உள்ளார். என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்கு, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அம்மா கேரக்டரை பெரும்பாலான நடிகையர் ஏற்றுக்கொள்வதில்லையே?
இந்த படத்தை பொறுத்தவரை, வெறும் அம்மா ரோல் மட்டும் இல்லை, பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நிறைய சொல்லியிருக்காங்க. அதனால், இந்த கதையை கூறிய போது, சிறிதும் தயங்காமல் நடிக்க சம்மதித்தேன்.
இது போன்ற படங்களில் நடிக்க, பெரிய துணிச்சல் வேண்டும்; நீங்கள் எப்படி?
இந்த விஷயத்தில், நீங்கள் யோசித்த அளவுக்கு, நான் யோசிக்கவில்லை. கதையை கேட்டேன்; புதிய களமாக இருந்தது. எனக்கும், நடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது; அவ்வளவு தான்.
படத்தில் சிகரெட், ட்ரிங்க்ஸ் எல்லாம்...?
கிராமப்புறங்களில் வயதானவர்கள், இன்னும் சுருட்டு புகைக்கின்றனர். இன்னொரு படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிக்கிறேன். என்னை கேட்டால், சிகரெட்டை விட, பைக் ஓட்டுவது ரொம்ப கஷ்டம்.
தரமணி படத்தில் நடிக்கும் போது, எந்தெந்த விஷயங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையுடன் ஒத்து போனது?
ஐ.டி., நிறுவனத்தில், நான் வேலை பார்த்தது இல்லை; பைக் ஓட்டியது இல்லை. படத்தில் காட்டியது போல், என் நிஜ வாழ்க்கையில் எதுவுமே நடக்கவில்லை. படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு, நிஜ வாழ்க்கையிலும் இந்த பொண்ணு, இப்படித்தான், என்ற முடிவுக்கு வர வேண்டாம்.
பெண்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பெண்கள், இந்த சமூகத்தில் மிக மரியாதையாக நடத்தப்பட வேண்டும். அதைத் தாண்டி, பெண்கள் சுதந்திரம், அது, இது என்றெல்லாம் பேச விரும்பவில்லை. மரியாதை கிடைத்தால் போதும்.
பாதுகாப்பற்ற சம்பவம் எதுவும் உங்கள் வாழ்க்கையில் நடந்தது உண்டா?
அது, ரொம்ப நடந்திருக்கு. வீட்டுக்கு அருகில், ஜூஸ் சாப்பிட போகும் போது, சிலர், என் காரை, இருசக்கரவாகனங்களில் பின் தொடர்ந்தனர். இது, ஏதோ, பார்ட்டியில் நடந்த சம்பவம் இல்லை. என் வீட்டுக்கு அருகில் நடந்த சம்பவம். இந்த விஷயத்தில் அதிக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு வேண்டும்.
ஆண்ட்ரியா, இப்போது எப்படி?
நான், என் வாழ்க்கையை வாழ்கிறேன்; சர்ச்சையான விஷயங்களில் சிக்காமல், அமைதியான வாழ்க்கை வாழ்கிறேன். எனக்கான நட்பு வட்டாரங்கள் அப்படியே தான் உள்ளன. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தாண்டு, உங்களுக்கு அதிக விருதுகள் கிடைக்கும் போலிருக்கிறதே?