<?xml version='1.0' encoding='utf-8'?><rss version='2.0'><channel><title>Dinamalar.com |November 21,2009</title><description>Cinema News,Tamil cinema News,Actor,Actress,Kollywood News,bollywood news,gossip</description><item><title>அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்</title><description>பருத்திவீரன் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற டைரக்டர் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகளை ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்களாம். யோகி படம் வருகிற 27ம்தேதி ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் யோகி பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ்:- / /* யோகி படத்தில் ஒரு கல்லூரி பேராசிரியர், ஒரு பாடலாசிரியர், ஒரு பத்திரிகையாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அமீர். / /* இந்த படம் 100 சதவீதம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதிகம் காட்டியிருக்காத குடிசைப் பகுதியில் படம் பிடித்துள்ளனர். / /* தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு சண்டை காட்சிகளுக்காக மட்டும் 52 நாட்கள் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. சண்டை பயிற்சி மாஸ்டர் ராஜசேகர். டூப் இல்லாமல் எல்லா காட்சிகளிலும் அமீரே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். / /* யோகி படத்தின் கதாநாயகி மதுமிதா, முதன் முறையாக சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். கதைப்படி தெலுங்கு கலந்த தமிழ் பேச வேண்டி இருந்ததால் மதுமிதா குரல் பொருத்தமாகி விட்டதாம். / /* மொத்தம் 3 பாடல்கள். முதல் முறையாக அமீர் படத்தில் யுவன் பாடியிருக்கிறார். முதல் முறையாக பாடலாசிரியர் சினேகன் பாடல் எழுதி, பாடி, நடித்தும் இருக்கிறார். மாஸ்டர் தினேஷ் நடனம் அமைத்துள்ளார். 10 நாட்கள் நடனத்திற்கு எடுத்துள்ளனர். எந்தவித நடனப் பயிற்சியும் இல்லாமல் அமீரை ஆட வைத்திருக்கிறார் தினேஷ் மாஸ்டர். / /* சென்னையில் நிறைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் சிறப்பு அனுமதி பெற்று படம் பிடித்துள்ளனர். சேஸிங் சீன் மட்டும் மவுண்ட் ரோட்டில், பெரிய ரிஸ்க் எடுத்து படமாக்கியுள்ளார் கேமராமேன் குருதேவ். இந்த காட்சி கண்டிப்பாக பரபரப்பாக பேசப்படும் என்கிறது யோகி யூனிட். / /* கஞ்சா கருப்பு, சுவாதி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட 8 பேர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். / /* சென்னையை சுற்றிய ஸ்லம் பகுதியில் படமாக்கும்போது, கதையின் களம் அதுவானதால், அந்த பகுதியில் வசிக்கக் கூடிய வினோத், ஜூஜூபா போன்றவர்கள் அமீரின் நண்பர்களாக நடித்துள்ளனர். அவர்கள் சொந்தக்குரலில் பாடியும், பேசியும் உள்ளனர். / /* யோகிக்காக காஸ்ட்யூம் செலவு அதிகம் இல்லையாம். இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்த உபயோகத்தில் உள்ளவைகளையே பயன்படுத்தியுள்ளனர். / /* யோகி படத்திற்கு பூஜை போட்டு இரண்டே கால் ஆண்டுகள் ஆகி விட்டது. நிறைய போராட்டங்களுக்கு பிறகு 165 நாட்கள் சூட்டிங்கை நடத்தியிருக்கிறார் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா. / /* இந்த படத்தை சென்னையில் அமீரின் டீம் ஒர்க் புரொடக்ஷன் ரீலிஸ் செய்கிறது. மற்ற அனைத்து ஏரியாக்களிலும் நல்ல விலைக்கு விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. / /- தினமலர் சினி டீம் -</description><category>ஸ்பெஷல் ரிப்போர்ட்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1307Yogi_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1307&amp;Cat=6</link></item><item><title>மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு</title><description>சித்து பிளஸ்2 பஸ்ர்ட் அட்டம்ப்ட் படத்தினை முடித்த கையோடு நடிகர் சாந்தனு அடுத்த படமான ஆயிரம் விளக்கு படத்தில் பிஸியாகி விட்டார். டைரக்டர் ஷங்கரிடம் இயக்குனர் பயிற்சி பெற்ற எஸ்.பி.ஹோசிம் இயக்கும் இந்த படத்தை தொடர்ந்து சாந்தனு தனது தந்தை டைரக்டர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மகனுக்காக பாக்யராஜ் ரீ-மேக் செய்யும் படம் சுவரில்லாத சித்திரங்கள். கதையமைப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் மகன் சாந்தனுவுக்கு ஏற்ற ஜோடியை தேடும் படலத்தில் இறங்கியிருக்கிறாராம் பாக்யராஜ்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1306Bakyaraj_santhanu_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1306&amp;Cat=2</link></item><item><title>பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை</title><description>பழைய மற்றும் புதிய திரைப்படங்களை பாதுக்காக டிஜிட்டல் முறையை பயன்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் ஊடகம், பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டின் இரண்டாம் நிகழ்ச்சி இறுதியில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு மற்றும் ஊடகம் கேளிக்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையிலும் தொடங்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தியதற்கு இப்போது பலன் கிடைத்து நிறைவேறியுள்ளது. இம்மாநாட்டில் திரைப்படத் துறையின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சில கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முன்வைத்துள்ளோம். இந்தியாவில் சினிமா என்ற தொழிலை பிரதான தொழிலாக அறிவிக்க வேண்டும். பழைய மற்றும் புதிய திரைப்படங்களை பாதுகாக்க டிஜிட்டல் முறையை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கலையை எத்தனை வருடங்கள் கடந்தாலும் பாதுகாக்கலாம், என்றார். திரைபடங்கள் அனைத்தும் பதிப்புரிமை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த கமல், அதற்காக ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். </description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1305Kamal_has_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1305&amp;Cat=2</link></item><item><title>புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783</title><description>திருமலை புரடக்சன்ஸ் சார்பில் ஏ.செய்யது இப்ராகிம் தயாரிக்கும் புதிய படத்துக்கு, கைபேசி எண் 9677027783 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. செல்போன் எண்களை தலைப்பாக கொண்ட முதல் படம் இதுதான்.  ஒரு ஊரில் தொடர்ந்து நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கும், அமானுஷ்யமான சம்பவங்களுக்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் காரணமாக அமைகின்றன. காதலும், திகிலும் கலந்து இந்த படம் தயாராகிறது. நாயகன் - நாயகியாக புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தேஜா ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஜி.தாஸ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டைரக்டர் விஷ்வக் சேனன். தலக்கோணம், கொடைக்கானல், புதுச்சேரி, காஞ்சிபுரம்  உள்ளிட்ட இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1304cellphone_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1304&amp;Cat=2</link></item><item><title>சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்</title><description>பாலிவுட் அழகுப்புயல் சோஹா அலிகான் மனதில் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இர்பான் பதானுக்கு இடம் கிடைத்துள்ளது. வசீகர தோற்றம் கொண்ட இர்பான், மிகவும் கவர்ச்சியானவர் என புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இர்பான் தவித்து வரும் நிலையில் நடிகை சோஹா அலிகான் அளித்துள்ள பேட்டியொன்றில், எனக்கு முன்பெல்லாம் டிராவிட் ஆட்டம் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் டிவி நிகழ்ச்சிக்காக இர்பான், யூசுப் பதான் சகோதரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இர்பான் ஆற்றல் மிக்கவராகவும், அழகானவராகவும் காட்சி அளித்தார். மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் இருந்தார், என்று வர்ணித்துள்ளார்.</description><category>பாலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1303soha_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1303&amp;Cat=3</link></item><item><title>ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்</title><description>ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் நடிக்கப்போகிறார் நடிகர் ஷாம். தெலுங்கில் ரவி தேஜாவின், கிக் படத்தில் வில்லனாக நடித்த ஷாம், இப்போது ஆந்திராவின் இளம் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். எக்கச்சக்க வாய்ப்புகள் ஷாமைத் தேடி வரத் தொடங்கி விட்டன. கிக் படத்தை தொடர்ந்து அவர் ஒப்புக் கொண்டிருப்பது பூரி ஜகன்நாத்தின் நிஜஅரசியல்வாதி கதையம்சம் கொண்ட படத்தைத்தான். ஏற்கனவே போக்கிரி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியிருக்கும் ஜகன்நாத், தற்போது ஷாமை வைத்து இயக்கவிருக்கும் இப்படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. ராஜசேகர ரெட்டியின் இளம் வயது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உருவாகவிருக்கிறதாம்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1302sham_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1302&amp;Cat=2</link></item><item><title>ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா</title><description>பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், தொழிலதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வருகிற 22ம்தேதி மும்பையில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு ஷில்பா தன் கணவர் ராஜ்குந்த்ராவுடன் மும்பை ஜூஹு கடற்கரையில் உள்ள ஜல்சா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டுக்கு குடிபோகிறார். அதே‌ நேரம், மாப்பிள்ளை ராஜ்குந்த்ரா மும்பையில் ஒரு பிரமாண்ட மாளிகையை ஷில்பாவுக்காக வாங்கியிருக்கிறாராம். அந்த வீட்டில் உள் அலங்கார பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அந்த வேலைகளை கவனித்து வருபவர் ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூஸன் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.</description><category>பாலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1301Shilpa_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1301&amp;Cat=3</link></item><item><title>தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!</title><description>தமிழ் சினிமாவை தவிர்ப்பது உண்மைதான் என்று நடிகை கனிகா கூறியுள்ளார். கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் கலைச்சேவையாற்ற புறப்பட்டிருக்கும் கனிகா மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவான பழசிராஜா கேரளாவில் சக்கை போடு போட்டு வருகிறது. இது தவிர மம்முட்டியுடன் துரோணா உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இதுபற்றி கனிகாவிடம் கேட்டால், தமிழில் நடிக்க 3 படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்‌டேன். மலையாளத்தில் 20 நாட்களில் ஒரு முழு படத்தின் சூட்டிங்கையே முடித்து விடுவார்கள். ஆனால் தமிழில் அப்படி இல்லை. அதனாலேயே தமிழ் படங்களை தவிர்த்து வருகிறேன், என்கிறார்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1300kanika_T.jpg</url></image><pubDate>11/20/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1300&amp;Cat=2</link></item><item><title>ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்</title><description>நடிகர் ஆர்யாவுடன் நடிகை நயன்தாரா ஜோடி சேரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் பூஜை இன்று நடந்தது. சிவா மனசுல சக்தி படத்திற்கு பிறகு டைரக்டர் ராஜேஷ் இயக்கும் இந்த புதிய படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதுகிறார். சென்னை 28, சரோஜா, கோவா படங்களை ஒளிப்பதிவு செய்த ஷக்தி சரவணன்தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். தஞ்சை, கும்பகோணம், திருச்சி, மைசூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் ரஜேஷ். கிராமம் மற்றும் நகரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1299Boss_Baskaran_T.jpg</url></image><pubDate>11/19/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1299&amp;Cat=2</link></item><item><title>ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!</title><description>பேராண்மை பட வெற்றியைத் தொடர்ந்து தில்லாலங்கடி பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் ஜெயம் ரவி. இதற்கிடையில் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பேராண்மை படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் நடித்திருந்தார். சூட்டிங் நேரத்தில் ஜெயம் ரவியும், ரோலண்ட்டும் நட்புடன் பழகினார்கள். இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஹாலிவுட்டில் எப்படி சினிமா உருவாக்குகிறார்கள் என ரவி கேட்டு தெரிந்துகொள்வாராம். அதேபோல் கிக்கிங்கரும் தமிழ் சினிமா பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்துகொண்டாராம். இப்போதும் இந்த நட்பு நீடித்து வருகிறதாம். தன் புதிய நண்பருக்கு சமீபத்தில் தனது வீட்டில் விருந்தளித்தார் ஜெயம் ரவி. விருந்து முடிந்து அவர் புறப்பட்டபோது, அவருக்கு வேட்டி - சட்டை, வலம்புரி சங்கு ஆகியவைகளை ஜெயம் ரவி பரிசாக அளித்தார். இந்த பரிசுகளைப் பார்த்து வியந்த கிக்கிங்கர், "நல்ல திறமையான நடிகராகவும், எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கும் தன்மையும் உள்ள உங்களைப் போன்றவர்கள்தான் ஹாலிவுட்டுக்கு தேவை. உண்மையிலேயே உங்களைப் போன்ற ஒருவரை எனக்குத் தெரிந்த பிரபல ஆங்கில இயக்குநர் தேடிக் கொண்டிருக்கிறார். நடிக்க வருகிறீர்களா?" என்று கேட்டிருக்கிறார். ஹாலிவுட் பட வாய்ப்பு வாயிற்கதவை தட்டியபோதிலும் யோசித்து சொல்கிறேன் என்று ஒற்றைவரி பதிலையே கூறியுள்ளார் ஜெயம் ரவி.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1298peranmai_T.jpg</url></image><pubDate>11/19/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1298&amp;Cat=2</link></item><item><title>திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்</title><description>திருட்டு சி.டி.‌,யை தடுக்க மாநில அமைச்சர் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும், திருட்டு சி.டி., தடுப்பு மசோதாவை கொண்டு வர தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறினார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி பேசினார். அப்போது, இந்திய திரைப்படத் துறை நல்ல படங்களை தயாரித்து வருகிறது. சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு படம் எடுக்கிறார்கள். வருடத்துக்கு 1000 சினிமா வெளிவந்தால் 50 சதவீதத்துக்கு மேல் தென்னிந்தியாவில் இருந்தே எடுக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. திருட்டு வி.சி.டியை ஒழிக்க தமிழ்நாட்டில் சட்டம் கடுமையாக உள்ளது போன்ற நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் கொண்டு வர ஆலோசிக்கப்படும். இதற்காக டிசம்பர் 5ம்தேதி மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெறும். திருட்டு சி.டி. தடுப்பு மசோதாவை கொண்டுவர தமிழக அரசு உதவ வேண்டும் என்று அம்பிகா சோனி கூறினார்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1297Ambhika_soni_T.jpg</url></image><pubDate>11/19/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1297&amp;Cat=2</link></item><item><title>சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி</title><description>இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் நடந்தது. கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன், ஏவி.எம்.சரவணன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ராம்குமார், கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்து ‌பேசினார். அப்போது, தமிழ் சினிமாவில் 28 வயதில் இருந்து பங்கு பெற்று வருகிறேன். இப்போது எனக்கு 86 வயது. நான் உங்களில் ஒரு அங்கம். இந்த கருத்தரங்கில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது கூட நான் இரண்டு படங்களுக்கு கதை வசனம் எழுதுகிறேன். அதில் கிடைத்த பணத்தை அருந்ததியர் மாணவ - மாணவிகளுக்கும் ஏழைகளுக்கும் சினிமா துறையில் நலிந்தவர்களுக்கும் வழங்கி வருகிறேன். அதேபோல் சினிமா துறையை சேர்ந்தவர்களும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை எளியோருக்கு வழங்கி உதவினால் மகிழ்ச்சியடைவேன், என்றார்.  /  /மேலும் அவர் பேசுகையில், தமிழ் சினிமா நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. சினிமா துறைக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. தமிழக ஸ்டூடியோக்கள் உலக தரம் வாய்ந்தவை. 1989இல் 54 சதவீதமாக இருந்த கேளிக்கை வரியை 40 சதவீதமாக குறைத்தோம். 1998இல் 30 சதவீதமாகவும், 2000இல் 25 சதவீதமாகவும் குறைத்தோம். தமிழ் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கும் வரிவிலக்கு அளித்தோம். விருதுகள் கூட குழு அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி வழங்குகிறோம். தமிழக அரசால் சினிமா தொழில் நலவாரியம் அமைக்கப்பட்டு உள்ளதுடன், சினிமா நகரத்தை உருவாக்க திட்டங்களை கொடுத்துள்ளது. அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும், என்றார்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1296Karunanithi_T.jpg</url></image><pubDate>11/19/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1296&amp;Cat=2</link></item><item><title>பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது</title><description>மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியுடன் பாலிவுட்டை சேர்ந்த நடிகர் - நடிகைகள் உள்பட 15 பேர் பழக்கம் வைத்திருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய இரு பயங்கரவாதிகளான டேவிட் ஹெட்லி, தாவூர் உசேன் ரானா ஆகியோரை அமெரிக்க புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  இவர்களில் ஹெட்லி, பிரபல இந்திப் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் மூலம் திரையுலக பிரமுகர்கள் பலருடன் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதே நேரத்தில் ராகுலும், அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகர், நடிகைகளும் அவர் தீவிரவாதி என்று தெரியாமலேயே அவருடன் பழகி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது பாலிவுட் நடிகர்கள் இம்ரான் ஹஸ்மி, கரண் கபூர், நடிகைகள் கங்கனா ரனாவத், ஆர்த்தி சபாரியா, தாரா சர்மா உள்ளிட்ட 15 பேர் மீதான பிடி இறுகுகிறது. மேற்படி நட்சத்திரங்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்களாம்.</description><category>பாலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1295AartiChabria_T.jpg</url></image><pubDate>11/19/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1295&amp;Cat=3</link></item><item><title>பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்</title><description>நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை லலிதாகுமாரி தம்பதியருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவரும், நடிக‌ை லலிதாகுமாரியும் கடந்த 1994ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரிந்து வாழ்ந்த இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், இருவரையும் சேர்த்து வைக்க பல கட்ட சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு குழந்தைகள் யாரிடம் இருப்பது, அவர்களுக்கு என்ன செய்து தருவது, பிரகாஷ்ராஜ் தரப்பில் எவ்வளவு பணம் தருவது என்பது குறித்து இருவர் தரப்பிலும் பேசி முடிவு எடுத்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்டு புதிய மனு ஒன்றை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். / /இந்த வழக்கை நீதிபதி ராமலிங்கம் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்கப் பட்டதை ஏற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் 25-12-1994 அன்று நடைபெற்ற திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருமணம் ஆகி 15 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1294prakashraj_T.jpg</url></image><pubDate>11/19/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1294&amp;Cat=2</link></item><item><title>கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது</title><description>சினிமா உலகில் 50 ஆண்டுகள் அனுபவம் மற்றும் கலைச்சேவைக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதற்கான விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு விரு‌தை பெற்று‌ ரோட்டரி சங்க உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளித்தார். தமிழ் சினிமா, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய காரணம். செல்போன்களிலேயே படம் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் சினிமா முழுமையாக டிஜிட்டல் மயமாகிவிடும். வருடத்துக்கு 2 அல்லது 3 படங்களில் நடிக்காதது ஏன் எனக் கேட்கிறார்கள். பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பதால், அதற்கு உழைப்பு உட்பட அனைத்துமே அதிக நாட்கள் தேவைப்படுகிறது. படங்களின் தோல்வியிலிருந்து பல விஷயங்களை கற்கிறேன். வலி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது, என்று கமல்ஹாசன் பேசினார்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1293Rotary_T.jpg</url></image><pubDate>11/18/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1293&amp;Cat=2</link></item><item><title>சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி</title><description>வெளிநாட்டில் நடக்கும் சினிமா சூட்டிங்கில் பங்கேற்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அவர் 2010ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்ப வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரபல இந்தி நடிகரும், சமாஜ்வாடி கட்சியின் பொது செயலாளருமான சஞ்சய் தத், கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். பின்னர் இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஆயுத சட்டத்தின் கீழ் அவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். / /இந்த நிலையில் சஞ்சய்தத், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு சென்று சினிமா படபிடிப்பை முடித்து கொடுக்க வேண்டியது இருப்பதால், நான் வெளிநாடு சென்று வர நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் சினிமா சூட்டிங்கிற்காக வெளிநாடு சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்குள் அவர் படப்பிடிப்பை முடித்து விட்டு, பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், என்று தீர்ப்பளித்தார். / /நடிகர் சஞ்சய் தத், நோ ப்ராபளம், ஹேங் ஓவர், டபும் டமால் உள்ளிட்ட 7 படங்களின் சூட்டிங்கிற்காக தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</description><category>பாலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1292SanjayDutt_T.jpg</url></image><pubDate>11/18/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1292&amp;Cat=3</link></item><item><title>பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் நயன்தாரா</title><description>நடிக‌ை நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டார். தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு இன்று (18ம்‌தேதி) பிறந்த நாள். இவர் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை கேரளாவில் இருக்கும் பெற்றோருடன் கொண்டாடுவார். தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்வது முதல் இனிப்பு, விருந்து, விசேஷங்கள் என கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடும் நயன், இந்த ஆண்டும் வழக்கம்போல பிறந்த நாளில் பெற்றோரிடம் ஆசி பெற சென்றார். ஆனால் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடவில்லை. நயன்தாராவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டாராம் நயன்தாரா.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1291Nayanthara_T.jpg</url></image><pubDate>11/18/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1291&amp;Cat=2</link></item><item><title>டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு டாக்டர் பட்டம்</title><description>டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், கல்வியாளர் ஆர்.பி.சத்தா ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. நிகழ்ச்சியில் ‌‌டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு பெரியதாக எதையும் நான் சாதிக்கவில்லை. இந்த பட்டத்தைப் பெற்ற பிறகு ஏதாவது சாதித்தாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது, என்றார்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1290Ks_ravikumar_T.jpg</url></image><pubDate>11/18/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1290&amp;Cat=2</link></item><item><title>விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர்கள் வாழ்த்து</title><description>திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 2009-2011ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்து வந்த கலைப்புலி ஜி.சேகரனும், கே.ராஜனும் போட்டியிட்டார்கள். இதில் ஜி.சேகரன் 91 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கே.ராஜன் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ.ஜெயகுமார், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாதுஷா ஆகிய இருவரும் வெற்றி பெற்றார்கள். உதவி தலைவர் பதவிக்கு, டாக்டர் பி.காளிதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இணைச்செயலாளர் பதவிக்கு, டி.ராஜகோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயற்குழு உறுப்பினர்களாக வி.சந்திரமோகன், ஏ.வி.அரசு, ஜி.வேணுகோபால், யு.தனசேகரன், ஆர்.சம்பத், யு.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ராஜாரஹிம், ஈ.மணி, என்.சந்திரன், எம்.கே.குமார், கே.ஆர்.கோபிகிருஷ்ணா, கே.ரங்கநாதன், ஏ.எம்.ஏ.மாலிக், ஜி.டில்லிராஜன், எம்.சுதாகர், டி.ஆர்.ராம்பிரசாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். / /விநியோகஸ்தர் சங்க புதிய நிர்வாகிகளை தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் மற்றும் தயாரிப்பாளர்கள் பாலு, துரைராஜ், பவித்ரன், ராமநாதன், ஆனந்தி நட்ராஜ், விஜய முரளி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.</description><category>கோலிவுட் செய்திகள்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1289kalaipuli_G_T.jpg</url></image><pubDate>11/18/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1289&amp;Cat=2</link></item><item><title>ஷாம் - மீனாட்சியின் அகம் புறம் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்</title><description>சாக்லேட் நாயகனாக இருந்த நடிகர் ஷாமை ஆக்ஷன் ரூட்டிற்கு மாற்றியிருக்கும் படம் அகம் புறம். டைரக்டர் திருமலை இயக்கும் இந்த படத்தில் நாயகன் ஷாமுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி நடிக்கிறார். விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீலிஸ் ஆகவிருக்கும் அகம் புறம் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :- / /* நடிகர் ஷாம் முதன் முறையாக நெகட்டிவ் ரோலில் (கடத்தல் கும்பல் தலைவனாக) நடித்திருக்கிறார். /* மலாக்கா தீவில் கண்காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்ச்சுகீசிய கப்பலில் மலேசிய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. /* மலேசியா டூ சிங்கப்பூர் போகும் ஸ்டார் கோஸ்ட் கப்பலில் சூட்டிங் நடத்தியபோது நிலை தடுமாறி ஷாம், மீனாட்சி, டைரக்டர் திருமலை, கேமராமேன் முரளி உள்ளிட்டவர்கள் நடுக்கடலில் தவித்தனர். /* படத்தில் முதன் முறையாக இந்தி கிளாமர் நடிகை காஷ்மீரா ஷா ஷாமுடன் நடனம் ஆடியிருக்கிறார். /* சென்னை மது‌ரவாயலில் உள்ள ஓடமா நகரில், பிற ஊர்களில் உள்ள கிராமப்புறங்களைப் போன்ற இடத்தை ‌தேர்ந்தெடுத்து மிக அழகாக அந்த கிராமத்தை படம் பிடித்துள்ளனர். /* இதுவரை நடித்த படங்களில் இல்லாத அளவிற்கு நடிகை மீனாட்சியின் கிளாமர் காட்சிகள் இடம்பெறுகின்றன. /* மனித வாழ்க்கையில் அனறாடம் ந‌டக்கும் சின்னச் சின்ன தவறுகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நேரடியாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. /* ஆனந்த்ராஜ் இதுவரை பண்ணாத நல்ல போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். /* இயக்குனர் பணியை ஏற்றிருந்த திருமலை எதிர்பாராதவிதமாக இப்படத்தின் மூலம் டி கிரியேஷன்ஸ் பெயரில் த‌யாரிப்பாளராகவும் மாறியுள்ளார். /* சுந்தர்சி.பாபு இசையில் லண்டன், கனடாவில் பாடல் மிக்ஸிங் பதிவு செய்யப்பட்டுள்ளது. /* எந்த இடையூறும் இல்லாமல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இறுதி ரீ-ரெக்கார்டிங், ஸ்பெஷல் எபெக்ட் உள்ளிட்ட பணிகள் மலேசியா, சிங்கப்பூரில் நடந்துள்ளது. / /- தினமலர் சினி டீம் -</description><category>ஸ்பெஷல் ரிப்போர்ட்</category><image><url>http://img1.dinamalar.com/cini/CNewsImages/Thumb/1288Agam_puram_T.jpg</url></image><pubDate>11/18/2009 12:00:00 AM</pubDate><link>http://cinema.dinamalar.com/DetailNews.aspx?id=1288&amp;Cat=6</link></item></channel></rss>