|
கலைஞர் டி.வி.,யின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று சிறப்பு கொண்டாட்டத்துடன் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த கொண்டாட்டத்துடன் விமானத்தை கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆன தினமும் சேர்ந்து கொண்டதால், வித்தியாசமான விமான நிலைய செட் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தத்ரூபமான மெகா சைஸ் ஏரோபிளேன் பேக்ரவுண்டுடன், ஏர்போர்ட் போன்ற செட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றால், நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் ஏர்போர்ட் சம்பவங்களை மையமாக வைத்து டயலாக் பேசி ஆட்டம் போட்டது கைத்தட்டலைப் பெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் நடுவர்கள் தங்களது விமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கலா மாஸ்டர் கூறுகையில், ஒருநாள் இரவு நான் ஏரோபிளேனில் சென்னையில் இருந்து வெளியூருக்கு புறப்பட்டேன். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன், மழை பெய்தது. விமானம் கீழே இறங்க தயாரான நேரத்தில் வானிலை மோசமாக இருந்ததால், அங்கு தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே வந்தது. வானிலை சரியானதும் மீண்டும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் பயந்து போய் அந்த விமானத்தில் செல்லாமல் வீட்டுக்கே வந்து விட்டேன், என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
|
| |
|
|