|
இந்த ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரையாக அஞ்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ம் ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரை போட்டி சென்னையில் நடந்தது. இந்த போட்டியில் சின்னத்திரை நடிகைகள் 10 பேர் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த இப்போட்டியின் இறுதியின் மிஸ் சின்னத்திரை அழகியாக நடிகை அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை ஐஸ்வர்யா பிடித்தார். இவர் விஜய் டி.வி.யில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். 3வது இடத்தை ரஞ்சனி பிடித்தார். இவர் பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர்கள் தவிர சிறந்த கூந்தல் அழகியாக திவ்யா, சகஜமாக பழகும் அழகியாக பெரி, பெர்சனாலிட்டி அழகியாக கவிதா, சிரிப்பழகியாக நிஷா, கண்ணழகியாக கவுரிலட்சுமி, உடல் அழகியாக மாயாரெட்டி, அறிவுத்திறன் அழகியாக ஸ்ரீதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
|
| |
|
|