|
|
நாடோடிகள் படத்தில் நொறுக்குத்தீனி தின்றபடியே திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த கேரள ப்யூட்டி அனன்யா அடுத்து சீடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளத்தில் ப்ருத்விராஜ் - நவ்யா நாயர் நடித்த படம் நந்தனம். இப்படத்தை தமிழில் சீடன் என்ற பெயரில் இயக்கப்போகிறார் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா. இதில் நடிகர் பிருத்விராஜே நாயகனாக நடிக்கிறார். நாடோடிகளுக்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் கேரளாவுக்கு பறந்த அனன்யா தற்போது சீடன் படத்தில் நாயகியாக நடிக்கிறார். நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் சிலரும் நடிக்கவுள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராமிடம் அசிஸ்டண்ட்டாக இருந்து கேமரா பயிற்சி பெற்ற ஸ்ரீனி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது யோகி படத்தை இயக்கி முடித்திருக்கும் சுப்பிரமணியம் சிவாவிற்கு, நிறைய படங்களில் நடிக்க ஹீரோ வாய்ப்பு வாயிற் கதவை தட்டியபோதிலும் இயக்கத்தில் இன்னும் உச்சத்தை அடைய வேண்டும் என கருதிய அவர், நடிப்புக்கு நோ சொல்லி விட்டார் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
|
| |
|
|