|
|
சல்மான்கானை வைத்து மீண்டும் படம் ஒன்றை இயக்க, நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனிகப்பூர் இது குறித்து கூறும்போது, பிரபுதேவாவுடன் இணைந்து படம் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தில் அனைவரும் விரும்பும் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்க உள்ளார். ஏற்கனவே, தமிழில் வெளியான போக்கிரி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்த பிரபுதேவா. அந்த படத்திற்கு வான்டட் என்று பெயரிட்டு சல்மான்கானை ஹீரோவாக நடிக்க வைத்து இருந்தார். விரைவில் சல்மான்கான் பிரபுதேவா கூட்டணியுடன் மற்றொரு படத்தை எதிர்பார்க்கலாம்.
|
| |
|
|