டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பைரவா படத்திற்கு பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழை விட தெலுங்கில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நானியுடன் அவர் நடித்த நேனு லோக்கல் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால், தெலுங்கில் பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதையில் உருவாகும் மகாநதி படத்தில் லீடு ரோலில் நடித்து முடித்து விட்டார்.
அதையடுத்து, தற்போது திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத அவரது 25-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்து பாங்காங்கில் நடைபெறுகிறது. அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலை ஏற்கனவே இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சில தினங்களிலேயே அந்த பாடலை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளார்களாம்.
மேலும், இதே படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் சில பாடல்களுக்காக வேறு சில வெளிநாடுகளுக்கும் பவன்கல்யாண் டீமுடன் செல்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, இந்த படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.