600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சரவண விக்ரம். கடந்த இரண்டு வாரங்களாக செண்டிமெண்ட் காட்சிகளாக நகர்ந்து வரும் இந்த தொடரின் கதையில் லஷ்மி அம்மாவின் மரணம், இறுதி சடங்கு எபிசோடுகள் டிஆர்பியில் நல்ல பாய்ண்டுகளை அள்ளி இருக்கிறது. அதிலும் இறுதிச் சடங்கின் போது கண்ணன் கதாபாத்திரத்தில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்திய சரவண விக்ரம் பாராட்டுகளை பெற்று வருகிறார். சீரியலில் கண்ணன் அவரது அம்மா இறப்புக்காக கதறி அழும் காட்சிகளை பார்த்துவிட்ட சரவண விக்ரமின் தாயார் நிஜமாகவே கதறி அழுதுள்ளார். இந்நிலையில் சரவண விக்ரம் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.