மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. இவர் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அஸ்வதி பாபு, தனது வீட்டில் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திற்கரை போலீசார் அஸ்வதி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து எம்டிஎம்ஏ என்கிற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அஸ்மிதாவும், அவரது டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர், மும்பையில் இருந்து போதை பொருளை கடத்தி வந்தது, அதை கேரளாவில் நடக்கும் ரகசிய பார்ட்டிகளுக்கு சப்ளை செய்து வந்திருப்பதாகவும், சினிமாவில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. அஸ்மிதாவிடம் விசாரணை நடத்தினால் மேலும் பலர் சிக்கவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கள்ள நோட்டு அச்சடித்தாக சமீபத்தில் ஒரு மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.