ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்டார் பிளஸ் டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட பேண்டசி சீரியல் நஸார். இதில் பிரபல பாலிவுட் நடிகை அந்தரா பிஸ்வாஸ், ரித்து சவுத்ரி, நியாதி பட்டாணி, ஹரிஷ் ராஜ்புத், சமிதா பன்சாலி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 38 எபிசோட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
தற்போது இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் அதே கண்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
200 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தீய சக்தியான மோகினி, தன்னை இளமையாக வைத்துக் கொள்ள மனிதர்களை கொன்று ரத்தம் குடிக்கிறாள். தன் காம இச்சைக்காக மிருதுள் என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு அனஸ், காஜல் என இரண்டு குழந்தைகளும் பிறக்கிறது. மோகினிக்குள் இருக்கும் தீய சக்தி மீண்டும் எழுதுகிறது. கணவனை கொலை செய்து ரத்தம் குடிக்கிறாள்.
அவள் தன் குழந்தைகளையும் கொல்ல நினைக்கிறாள். இதனை திவ்யா என்பவர் கண்டுபிடித்து குழந்தைகளை காப்பாற்றி வளர்கிறாள். குழந்தைகளில் ஒருவரான அனஸ் இளைஞன் ஆனதும் அசாதாரண சக்கி கிடைக்கிறது. தன் மகனை காண மோகினி மீண்டும் வருகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.