தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வாரத்தில் 6 போட்டியாளர்களாக இருந்தவர்களில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர்.
இறுதிப் போட்டிக்கான டாஸ்க்குகள் இந்த வாரம் கடுமையாக இருக்கலாம். எந்த ஆண் போட்டியாளரும் இல்லாத இறுதிப் போட்டி எப்படியிருக்கும் என்பதிலும் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மிகவும் நியாயமாக செயல்பட்ட யாஷிகா வெளியேறிய போது பேசிய பேச்சுகள் ரசிகர்களிடம் அவருக்கென ஒரு தனி இமேஜை உருவாக்கியுள்ளது. ஐஸ்வர்யா இறுதிப் போட்டியில் இடம் பெற்றுள்ளதை ஒவ்வொரு வாரமும் வாக்களிக்கும் ரசிகர்களே விரும்பவில்லை. அதில் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள். அந்த அரசியலுக்கு கமல்ஹாசனும் உடந்தையாக இருக்கிறாரோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
நிகழ்ச்சியின் 67வது நாளில் வந்து இணைந்த விஜயலட்சுமி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதும் நியாயமானதாக இல்லை என்றே பலரும் கருதுகிறார்கள். முதல் சீசனை விட இந்த இரண்டாம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் எழுந்தாலும் இறுதிக் கட்ட பரபரப்பு அதிகமாகவே உள்ளது.
வரும் ஞாயிறு அன்று நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக இறுதிப் போட்டி நடக்க உள்ளது. ஜனனி, ரித்விகா ஆகியோரில் இருவர்தான் பிக் பாஸ் 2 சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை மீறி வேறு ஏதாவது நடந்தால் ரசிகர்களின் சாபத்திற்கு இந்த நிகழ்ச்சி ஆளாகும் என்பதே உண்மை.