'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஸ்ரீதேவி. இவரது வில்லத்தனத்துக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தனது மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபரை சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் அசோக் சிந்தாலா. பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். என்றாலும் செல்லப் பிராணிகளை படம்பிடிப்பதில் நிபுணர். இவரைப் பற்றி பேஸ்புக்கில் அறிந்து கொண்ட ஸ்ரீதேவி, தனது வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை படம் எடுக்க அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். இந்த சந்திப்பு காதலாக மலர சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆந்திர பாரம்பரியப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி.