ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராஜ் டி.வியில் கடல் கடந்து உத்தியோகம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. ராஜ் டிவியில் எச்டி டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பாகும் முதல் தொடர் இது. ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தயாரிக்கிறது. லேனா மூவேந்தர் இயக்குகிறார். சுர்ஜித் அன்சாரி ஹீரோவாகவும், காயத்ரி கண்ணன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர மதுமிதா, கவுரிஜானு, ஈ.வி.எஸ் கணேஷ்பாபு, சிவலிங்க பாபு, பாலிமர் பிரதீப், பானு பரத்வாஜ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி பெரிய இடத்துக்கு அனுப்பும் நாராயணன் முதுமையில் தனிமையில் வாழ்கிறார். இவரது மகன் தமோதரன் மனைவி பிரியாவுடன் அமெரிக்காவில் செட்டிலாகிறார். மகளோ எப்போதும் வேலை வேலை என்று பணம் சம்பாதிப்பதிலேய குறியாக இருக்கிறார். கூட்டுக் குடும்பமாக வாழ நி¬னைக்கும் நாராயணன் காணும் கனவும், அது நிறைவேறுகிறதா என்பதும்தான் கதை. தனது 60வது திருமண நாளுக்கு வரும் மகள், மகன், பேரத் பேத்திகளை பல திட்டங்களை போட்டு தன்னுடனேயை தங்க வைக்கிறார். அது எப்படி என்பதுதான் திரைக்கதை. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.