விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
ஜூலியும் 4 பேரும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆலியா மானசா. தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். பணக்கார வீட்டுக்கு வேலைக்காரியாக சென்று அந்த வீட்டின் செல்லப்பிள்ளை சஞ்சயை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்து மருமகளாகிறார்.
ஆலியாவை துரத்த அந்த குடும்பத்தினர் செய்யும் சதியும், அதிலிருந்து அவர் தப்பிப்பதும் தான் கதை. ஆல்யா நடிக்கும் செம்பா கேரக்டர் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கும், சேனலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் ராஜா ராணியிலிருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை மறுத்து ஆலியா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நான் நடிக்கும் ராஜா ராணி சீரியல் பற்றி தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.