ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வருகிறவர்கள் சமீராவும், அன்வரும். இருவரும் நிஜத்திலும் காதலர்கள். தற்போது இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ஹீரோயினாக நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்த தொடர் மராட்டி மொழியில் ஒளிபரப்பான ஒரு காதல் தொடரின் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்புகள் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான புரமோ பாடலை சினிமா பாடலுக்கு நிகராக படம் பிடித்திருக்கிறார்கள். இந்த தொடர் வருகிற 19ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தனுக்கும், மனசெல்லாம் காதல் நிறைந்திருக்கும் ஒரு டீச்சருக்குமான காதல் கதை இது.