மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இமயம் மற்றும் கேப்டன் டி.வியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இப்போது பிசியான சீரியல் நடிகை. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, பைரவி தொடர்களில் நடித்தார். இப்போது பிரியமானவளே, வம்சம் தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஆகிவிட்டாலும் அவ்வப்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுக்கிறார். நடிப்பு, தொகுப்பு இரண்டிலும் சாதனை படைக்க விரும்பினாலும் அவருக்கு இன்னொரு விருப்பம் இருக்கிறதாம். அது ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்பது. இதற்காக இப்போது தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார். “என்னதான் நடிகை, தொகுப்பாளினி என்றாலும் இதன் மூலம் மக்களை எண்டர்டெயின்மெண்ட்தான் பண்ண முடியும். மக்களுக்கு சேவை செய்யணும்னா கலெக்டர் ஆகணும். அதற்காக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்” என்கிறார் பிரியங்கா. இதையேதான் நடிகை ஆர்த்தி பத்து வருடமாக சொல்லி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.