தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செய்தி சார்ந்து புதிய நிகழ்ச்சிகளை புதிய கோணங்களில் தந்து கொண்டிருக்கிறது நியூஸ் 7 சேனல். அந்த வரிசையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதிகமான ஆதரவை பெற்று வருகிறது மாண்புமிகு நீதியரசர்கள் என்ற நிகழ்ச்சி. பொதுமக்களை விட்டு விலகியே நிற்கும் நீதிபதிகளை மக்களோடு பேசவிட்டு பல அரிய தகல்வகளை தரும் நிகழ்ச்சி.மக்கள் அன்றாடம் சந்திக்கும் நிலப் பிரச்சினை, விவாகரத்து, இட ஒதுக்கீடு, கல்வி கட்டண கொள்ளை, தவறான மருத்துவ சிகிச்சை, உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னாள் பிரபல நீதியரசர்கள் பதிலளிக்கிறார்கள். அதோடு தாங்கள் சந்தித்த வழக்குகள், வழங்கிய தீர்ப்புகள் பற்றியும் கூறுகிறார்கள். பிரபலமான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் பற்றியும் தங்கள் கருத்தைக் கூறுகிறார்கள். இந்த புதுமையான நிகழ்ச்சி. சனிக்கிழமைதோறும் காலை9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.