பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
டிஸ்கவரி சேனலுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் டிஸ்கவரி தமிழ் சேனல் சினிமாவில் கால் பதிக்கிறது.
பாலா இயக்கி உள்ள 'தாரை தப்பட்டை' படம் தஞ்சாவூரில் வாழும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியது. கதைப்படி டிஸ்கவரி தமிழ் சேனல் நிருபரும், கேமராமேனும் தஞ்சையில் உள்ள பிரபலமான கரகாட்ட கலைஞர் சாமி புலவரை பேட்டி எடுக்கச் செல்கிறார்கள். அவர் இறந்துவிட அவரது மகன் சன்னாசியிடம் (சசிகுமார்) கரகாட்டம் பற்றி கேட்கிறார்கள். அவர் சொல்லும்போது அது கதையாக விரிகிறது.
இதுபற்றி பாலா, டிஸ்கவரி சேனல் அதிகாரிகளிடம் சொன்னபோது அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட சேனல், அதையே தாங்களும் ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பால ஒப்புக் கொள்ள தற்போது இரண்டு பணிகளும் முடிந்திருக்கறிது.
"தென்னிந்தியாவில் எங்கள் சேனலுக்கு நல்ல மதிப்பு உள்ளது. தென்னிந்திய கலைகளை பற்றி உலகிற்கு தொடர்ந்து சொல்கிறோம். தாரை தப்பட்டை மூலம் கரகாட்டக் கலையை ஆய்வு செய்து அதனையும் சொல்ல இருக்கிறோம். ஒரு நல்ல பணியில் பாலாவுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் டிஸ்கவரி சேனலின் தென்னிந்திய பொது மேலாளர் ராகுல் ஜோரி.