ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம், தேவயானி நடித்த கோலங்கள், கைராசி குடும்பம் உள்பட பல தொடர்களை இயக்கி உள்ளார். தற்போது பல தொடர்களில் நடித்தும் வருகிறார்.
திருச்செல்வத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. சொந்த வேலையாக காரில் பேராவூரணி சென்ற திருச்செல்வம் நேற்று அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது காருக்கு முன்னே சென்ற ஒரு ஆட்டோ திடீரென பிரேக் போட்டு நின்றதால் வேகமாக சென்ற திருச்செல்வத்தின் கார் ஆட்டோவின் மீது மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. திருச்செல்வத்தின் கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் பள்ளத்தில் பாயாமல் தப்பியது.