விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை நடனம், பாட்டு, காமெடி நிகழ்ச்சிகள் என்றால் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் கொடுப்பதற்காக நீதிபதிகள் என்ற பெயரில் கிட்டத்தட்ட நான்கு பேர் அமர்ந்து கொண்டு தங்களது ஜட்ஜ்மென்டுகளை சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் கோவை சரளா, ஊர்வசி, ரமேஷ்கண்ணா உள்பட 4 பேர் நீதிபதிகளாக செயல்பட்டு வருகின்றனர். உங்களில் யார் காமெடி கிங் என்று நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் காமெடியன்கள் மேடையில் தோன்றி காமெடியாக நடிப்பதற்கு இவர்கள் நான்கு பேரும் மதிப்பெண் கொடுத்து வருகின்றனர்.
சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். அதோடு, இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளாக இருப்பவர்களுக்கு பெரிய தொகை சன்மானமாக கொடுக்கப்படுவதால் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகமாகி நிகழ்ச்சியை தயாரித்து வழங்கிய நிறுவனத்துக்கு நஷ்டமாகி விட்டதாம்.
அதனால் இப்போது தயாரிப்பு செலவை குறைக்கும் முயற்சியாக, ஏவிஎம்மில் போட்டிருந்த செட்டை அங்கிருந்து இடமாற்றி சென்னையிலுள்ள வளசரவாக்கத்தில் சிறிய அளவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதோடு, நீதிபதிகளாக இருப்பவர்களுக்கான சம்பளம் பெரிய தொகையாக இருப்பதால், விரைவில் விரலுக்கேற்ற வீக்கமாக வேறு நபர்களை மாற்றும் ஏற்பாடுகளும் நடப்பதாக சொல்கிறார்கள்.