நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
சென்னையை சேர்ந்த ஜி.அலெக்ஸ், பென்சீகர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் "தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்களும், ஆபாசமான வசனங்களும், வன்முறை காட்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகிறது. இதனால் தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு தணிக்கை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் கோர்ட் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை எதுவுமில்லை என்றாலும் கேபிள் டி.வி நெட்வொர்க் சட்டம் 1995ன்படி கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறியதாகவோ, அல்லது வேறு விதமான புகார்கள் வந்தால் அதன் மீது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க எலெக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. பொதுவான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் நீதிமன்றம் தலையிடவோ சட்டம் இயற்ற வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது. அரசுதான் முடிவு செய்ய வேண்டும். என்று தீர்ப்பு கூறியது.