தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராதிகா. சங்கத்திற்காக பல திட்டங்களை அவர் கையில் வைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
எங்களுக்கென்று சொந்த அலுவலக கட்டிடம் வேண்டும். சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்டப்போகிறோம். அதை எந்த வகையில் செய்யலாம் என்று யோசித்து வருகிறோம்.
பிற மொழி சீரியல்கள் இங்கு டப் செய்து ஒளிபரப்புவதால் இங்குள்ள டெக்னீஷியன்களுக்கு வேலையில்லாமல் போகிறது. கேரளா, கன்னடத்தில் டப்பிங் சீரியல்கள் கிடையாது. அதுபோன்ற நிலையை இங்கு கொண்டு வரவேண்டும். இதற்காக சேனல்களுடன் பேசுவோம்.
எங்கள் சங்கம்தான் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கிறது. இந்த விஷயத்தில் சினிமா வேறு தொலைக்காட்சி வேறு. பெப்சி ஸ்டிரைக் நடந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஸ்டிரைக் முடிந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அப்படியில்லை அன்றைக்குள்ள எபிசோட்களை கொடுத்தாக வேண்டும். இடைவெளி விட முடியாது. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். இதனை பெப்சி அமைப்புடன் பேசி சீர்படுத்துவேன் என்கிறார் ராதிகா.