தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல சீரியல்களில் நடித்தார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைத்தது. இதனால் வெறுத்துப்போனவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வாணி ராணியிலும், மகாபாரதத்திலும் நடித்து வருகிறார்.
இதுவரை நடிகையாக இருந்த நீலிமா தற்போது அழகிய சினேகிதி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகியிருக்கிறார். இது பெண்களுக்கான நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்து அழகிய சினேகிதியாக வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
"தொகுப்பாளினியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பல வாய்ப்புகள் வந்தபோதும் எனக்குள் இருந்த தயக்கத்தால் ஏற்கவில்லை. இப்போது துணிச்சலுடன் களம் இறங்கிவிட்டேன். இதை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் நீலிமா.