தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சியும், இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு ஒரிரு நாளில் முடியவுள்ள நிலையில் மூன்றாம் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யை பாராட்டி 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். அந்த ஆசை விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் நிறைவேறியுள்ளது. நடிகர் விஜய் ஒரு திறமையான நடிகர் என்று அவருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். தற்போது 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.