‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாளத்தில் தொண்ணூறுகளில் ஹீரோவாகவும் தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் முகேஷ். கேரளாவின் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சரிதாவின் கணவர் என்கிற வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு பிரபலமானவர். கடந்த 1988ல் சரிதாவை திருமணம் செய்து கொண்ட முகேஷ் 2011ல் அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பின் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை மறுமணம் செய்து கொண்டார். தற்போது எட்டு வருடங்கள் ஆன நிலையில் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மெத்தில் தேவிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணமாகி எட்டு வருடங்களாகியும் கூட என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரையுலக மற்றும் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஆனால் பல வருடங்களாக அதுதான் தொடர்கிறது. இனியும் அவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். அதேசமயம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணமும் இல்லை. அதனால் குடும்ப வன்முறை என்றெல்லாம் காரணம் சொல்லாமல், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு பிரிவதாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்” என கூறியுள்ளார் மெத்தில் தேவிகா.