கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்து விட்டாலும், மற்ற மொழி படங்களில் இருந்து வரும் முக்கிய வேடங்களையும் நடிகர் கிச்சா சுதீப் மறுப்பதில்லை. இதற்குமுன் பாகுபலி, சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சுதீப், அடுத்ததாக பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் விபீஷணனாக நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது.
அதிகாரபூர்வமாக இந்த செய்தி உறுதி செய்யப்படாத நிலையில், இந்தப்படத்தில் நடிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மழுப்பலாக பதிலளித்துள்ளார் கிச்சா சுதீப். இதுபற்றி அவர் கூறும்போது, “ஆதிபுருஷ் படக்குழுவினர் எனது மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். ஆனால் நான் இன்னும் அவர்களை சந்தித்து பேசவில்லை. பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் இதில் நடிக்கிறேனா என்பது பற்றி இப்போது என்னால் சொல்ல முடியாது” என கூறியுள்ளார்