600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கொரோனா பிரச்சினையால் தடைபட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க, ரஜினி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், மார்ச் இறுதி வரை ரஜினி தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், அதனை இளம் இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, ரஜினி சமீபத்தில் தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோ என சிலமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.