தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியின்றி தலைவராக பாரதிராஜா முயற்சித்தார். அது நடக்காததால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற போட்டி சங்கத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார்.
நிர்வாகிகள் இன்றி தனி அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக முரளி ராமசாமி வெற்றி பெற்றார். பெரும்பாலான பொறுப்புக்கு அவரது அணியினர் வந்தனர்.
ஒரே ஒரு தயாரிப்பாளர் சங்கம் தான் இருக்க வேண்டும். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் தாய் சங்கத்தில் வந்து சேருமாறு புதிய நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதனை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.