பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்ததால் ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்தது. சில தியேட்டர்கள் முன்பாக போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்தக்காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து அரசுக்கும், மக்களுக்கும் அவதூறை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே முருகதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முருகதாஸ், முன் ஜாமீன் பெற்றார். மேலும், முருதாஸ் சர்கார் படத்திற்காக மன்னிப்பு கேட்பதோடு, இனி அப்படி விமர்சிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு முருகதாஸ் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார், அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாக முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது கூறி என சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்தார் முருகதாஸ்.
இந்த வழக்கில் முருகதாஸ் மீது பதியப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணைக்கு 6 வாரம் வரை தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.