இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பட்ஜெட்டில் படமெடுக்கும் கன்னட சினிமாவில் முதல் முறையாக பல கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் கே.ஜி.எப். இப்படத்தில், யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாகுபலி, 2.0' போன்ற பிரம்மாண்ட படங்களின் வரிசையில் கே.ஜி.எப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்தப்படம் கொண்டு செல்லும் என்கிறார் ஹீரோ யஷ்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை, தமிழில் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இதற்கான அறிமுக விழாவில் ஹீரோ யஷ்ஷை, அறிமுகப்படுத்தியபோது அவரது தந்தையைப்பற்றி விஷால் ஒரு தகவலை கூறினார்.
அதாவது யஷ் இவ்வளவு பெரிய ஹீரோவாக வளர்ந்து, நான்கைந்து பிளாக் பஸ்டர் படங்களையும் கொடுத்துவிட்டார். வருமானமோ கோடிகளில் கொட்டுகிறது. ஆனாலும் யஷ்ஷின் தந்தையோ, தான் பார்த்து வரும் பஸ் ட்ரைவர் வேலையை விட்டுவிடாமல் இன்னும் தொடர்ந்து வேலைக்கு சென்று வருகிறார் என்றார்.