இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
அருள்நிதி நடித்த டிமான்டி காலனி படத்தைத் தொடர்ந்து நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப்பை வைத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று, வணிகரீதியில் வெற்றியடைந்தது.
இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். கதையின் அவுட்லைனை கேட்டுவிட்டு, கதை பிடித்திருந்ததால், உடனடியாகத் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் விக்ரம். தற்போது நடித்து வரும் கடாரம் கொண்டான், மகாவீர் கர்ணா படங்களுக்கு இடையே இந்தப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம்.
அஜய் ஞானமுத்து விக்ரம் இணையும் இந்தப் படத்தைத் லலித் தயாரிக்கிறார். சசிகுமார் நடித்த அசுரவதம் படத்தைத் தயாரித்த இவர், 96 படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.