'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ரஜினிகாந்தின் உறவினர் வீட்டுப்பிள்ளையாக அறியப்பட்டாலும் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அனிருத்துக்கு அடையாளம் தந்து வளர்த்துவிட்டவர் தனுஷ் தான்.. ஆனால் இடையில் 'பீப் பாடல் உள்ளிட்ட சில கசப்பான நிகழ்வுகளால் அனிருத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய தனுஷ், தனது படங்களுக்கு வேறு இசையமைப்பளர்களை தொடர்ந்து இசையமைக்க வைத்தார்.
இதனால் எதிர்காலத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைய வாய்ப்பில்லையோ என்கிற சந்தேகம் இப்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் ரஜினி நடிப்பில், அனிருத் இசையமைத்துள்ள 'பேட்ட' படம் இவர்கள் குறித்த ஆச்சர்யமான ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஆம். இந்தப்படத்தில் 'இளமை திரும்புதே' என்கிற பாடலை தனுஷ் எழுதியுள்ளார். அந்தப்பாடலை அனிருத்தே பாடியுள்ளார்.
இதில் ரஜினியின் விருப்பத்தின் பேரில் தனுஷ் பண்ணினாரா அல்லது அனிருத்தே, தனுஷுடன் நேரடியாக டீல் செய்தாரா என்கிற கேள்வி எழுந்தாலும், இருவருக்கிடையே உள்ள விரிசலை 'பேட்ட' சற்று குறைக்கும் என நம்பலாம்.