பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து, சினிமா நடிகர் ஆனவர் சீனிவாசன். தனக்குத்தானே பவர் ஸ்டார் பட்டம் போட்டுக் கொண்டு காமெடியனாக படங்களில் நடித்து வந்தார். கடன் வாங்கித் தருவதாக பலரிடம் வாக்குறுதி கொடுத்து பல கோடி ஏமாற்றியதாக இவர் மீது பல வழக்கு உள்ளது. அடிக்கடி ஜெயிலுக்கும் போவார். அடிக்கடி படங்களில் நடிக்கவும் செய்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி ஜூலி, தனது கணவரை காணவில்லை என்று அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, சீனிவாசன் தான் ஊட்டிக்கு வந்திருப்பதாகவும், நிலபத்திர பதிவு செய்ய வேண்டியதன் காரணமாக வந்திருப்பதாகவும் போலீசுக்கு தெரிவித்திருக்கிறார். மனைவி ஜூலியும் தன்னுடன் தான் இருக்கிறார் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சீனிவாசன் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினர். மேலும் தனது மனைவி ஜூலியை கடத்தி ஊட்டியில் 11 பேர் சிறை வைத்துள்ளதாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார் சீனிவாசன். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஊட்டியில் இருந்த ஜூலியை மீட்டதோடு, இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.