ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வௌியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாய் நடந்தது. விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது :
இது நிஜமா என்று என்னால் நம்ப முடியவில்லை. சின்ன வயதிலிருந்து என் வாழ்வில் ஒரு அங்கம் ரஜினி. சினிமா மீது எனக்கு ஆசை வர காரணமே அவர் தான். மதுரையில் சினிமா தான் பொழுதுபோக்கு. அங்கு அவரின் படங்களை பார்தது தான் சினிமாவிற்கு வந்தேன்.
நம்ம படத்தை பார்த்து பாராட்டுவாரா என எண்ணினேன். பீட்சா படத்தை மனதார பாராட்டியவர் அவர் ஒருவர் மட்டுமே. அவருடன் படம் பண்ணுவேன் என எண்ணவில்லை.
ஜிகர்தண்டா படத்தை பார்த்துவிட்டு பரட்டை படம் ஞாபகம் வந்ததாக ரஜினி சொன்னார். அவரிடம், நான் உங்களை மனதில் வைத்து தான் ஒவ்வொரு படத்தின் கேரக்டரையும் உருவாக்குவேன் என்றேன். அப்படியென்றால் எனக்கே சொல்லலாமே என்றார். அதன்பின்னர் மற்றொரு நாளில் எனக்கு கதை இருக்குமா என கேட்டார், அந்தநாளை என்னால் மறக்க முடியாது.
பேட்ட படம் முழுக்க ரஜினிக்கான படம். ஒருவேளை நான் ஆஸ்கர் விருதே வாங்கியிருந்தாலும், ரஜினி படம் இயக்காமல் போய் இருந்தால், இயக்குநராக என் திரை வாழ்க்கை முழுமையாக பூர்த்தியாகி இருக்காது. அதைவிட பெருமையானது.
இவ்வாறு கார்த்திக் பேசினார்.