ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கஜா புயலினால் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. தார்பாய்களைக் கொண்ட்டு தற்காலிகமாக மழையிலிருந்து ஒதுங்கிக் நிற்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஏராளமான பேர் உதவி வருகின்றனர்.
ரஜினி சார்பில், ரஜினி மக்கள் மன்றத்தினர், தலைமை அலுவலகத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் அளவிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் பெருமானம் உள்ள பொருட்களை நேரடியாக வினியோகித்து வருகிறார்கள். எவ்வளவோ தேவைகள் இருந்தாலும், இருட்டில் மக்கள் அவசரத்திற்காக வெளியே செல்வதற்கு உதவியாக டார்ச் லைட்டுகள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராவூரணி நாடியம் கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கோவிந்த் நீலகண்டன் முயற்சிகள் எடுத்துள்ளார்.
இதை அறிந்த அமெரிக்க ரஜினி ரசிகர்கள் உதவ முன்வந்தனர். வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி பேன்ஸ், யு.எஸ்.ஏ அமைப்புகளைச் சார்ந்த ரசிகர்கள், 1000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்து, 1000 குடும்பங்களுக்கு பேட்டரிகளுடன் கூடிய டார்ச்லைட்கள் வழங்கி உள்ளனர். சமூக ஆர்வலர் நாடியம் கோவிந்த்.நீலகண்டன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வினியோகித்துள்ளார்.