ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்தவாரம் வெளியான இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான 2.0, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நாட்களில் ரூ.450 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து இந்தவாரமும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நிச்சயம் வசூல் 800 கோடியை தொடும் என்கிறார்கள்.
இதனிடையே 2.0 படம் சீனாவில் ரிலீஸாகிறது. இதுப்பற்றி லைகா டுவிட்டரில் கூறியிருப்பதாவது : 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ பெற்றுள்ளது. சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, 10 ஆயிரம் தியேட்டர்களில் மொத்தமாக 57 ஆயிரம் திரைகளில் ரிலீஸாகிறது. இவற்றில் 3டியில் மட்டும் 47 ஆயிரம் திரைகளில் திரையிடப்படுகிறது. மே 2019ல் சீனாவில் வெளியாகும், வெளிநாட்டு படம் ஒன்று சீனாவில் 3டியில் இவ்வளவு திரைகளில் திரையிடப்படுவது இது தான் முதல்முறை என தெரிவித்துள்ளது.