அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
உலகின் மிகப்பெரிய தியேட்டர்களில் ஒன்றான கிராண்ட் ரெக்ஸ், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ளது. ஹாலிவுட் படங்கள் திரையிடப்பட்டு வந்த இந்த தியேட்டரில் சமீபகாலமாக தமிழ் படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. இதை துவக்கி வைத்தது ரஜினியின் கபாலி படம் தான். அதையடுத்து மெர்சல் அங்கு திரையிடப்பட்டன.
இதையடுத்து தற்போது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான 2.0வும் இங்கு திரையிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான தமிழ் படங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே திரையிடும் அனுமதியை கொடுத்த இந்த தியேட்டர் நிர்வாகம், 2.0 படத்திற்கு டிசம்பர் 8ந் தேதி வரை திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது.
இதன்மூலம் கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் அதிகநாட்கள் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது.